NIA captured 27 Live Bombs in Jharkhand Lodge related to Patna Serial Powerful Bomb Blasts பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் மீதமுள்ள 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர். பா ஜ க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புள்ள ஹைதர் அலி தங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ஹோட்டலில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நேற்று சோதனை…
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
உத்திரப்பிரதேச சிறை சாலைகளில் 60% விசாரணை கைதிகள்
Prisoners in Uttar Pradesh prisons : 60 percent of Prisoners in Uttar Pradesh state Jails in india are not Convicted of Crime இந்தியாவின் அதிகப்படியான சிறைவாசிகளைக் கோண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும். சிறையில் உள்ள 81.027 கைதிகளில் 60 சதவீதத்தினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படாதவர்கள் என்ற அடிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச சிறைகளில் இருக்கும் கைதிகள் எண்ணிக்கை 81,027 ஆனால் சிறைகளின் மொத்த கொள்திறனே 48,298தான். மேலும் இதில் 55,460 பேர் விசாரணைக் கதிகள்! அதாவது வெறும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அதிககாலம் பலர் உள்ளனர். காஜிபூர் சிறையில் உள்ள 594 கைதிகளில் 532 பேர் விசாரணைக் கைதிகள். மாவ் என்ற சிறையில் 494 கைதிகளில் 402 பேர் விசாரணைக் கைதிகள். பல்ராம்பூர் சிறையில் 284 கைதிகளில் 243 பேர் விசாரணைக்…
Read Moreமேகலாயா அசாம் எல்லையில் தீவிரவாதிகள் வெறிச்செயல் 6 பேர் பலி
Six innocent people killed in a militant attack at a Remote village called Gendabari located in Assam Megalaya Border அசாம் – மேகாலய எல்லையில் உள்ள ஓர் கிராமத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை அசாமில் இயங்கும் தடைசெய்யப்பட்ட ‘காரோ தேசிய லிபரேஷன் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பினர் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொலைவெறி தாக்குதல், அசாம் – மேகாலய எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெண்டாபாரி எனும் கிராமத்தில் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டமாக கொண்டாடிகொண்டிருந்த பொதுமக்கள் மீது நவீன ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொலைசெய்யப்பட்டதாகவும்,…
Read Moreஇந்திய கிரிக்கெட் வீரர்கள் பணக்கார பட்டியல்: டெண்டுல்கர் முதல் இடம்
cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்து உள்ளனர். அவரது சொத்து மதிப்பு ரூ.965 கோடி (160 மில்லியன் டாலர்). கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மூலமும் இன்றி விளம்பரத்தில் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது. நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். தெண்டுல்கருக்கு அடுத்த படியாக 2 வது இடத்தில் டோனி உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 கோடி ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்தவர் யுவராஜ்சிங், இவரது சொத்து மதிப்பு சுமார் 190 கோடியாகும் நான்காவது இடத்தை ராகுல் டிராவிட் -126 கோடியும் , ஐந்தவது இடத்தை வீராட் கோஹ்லி -ரூ. 95 கோடி…
Read Moreதேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அழுத்த 'நோடா' பட்டன் : தேர்தல் ஆணையம் உத்தரவு
Election commission ordered to fix None of the Above’ (NOTA) button in the Electronic Voting Machine (EVM), any voter can exercise the option of negative voting and reject all candidates as unworthy of being elected. தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாத வாக்காளர்கள், அவரது விருப்பமின்மையை பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் ஒன்றை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு வழயாக அதை பதிவு செய்ய எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) எனும் பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்த்து கொள்ளும் படி உச்ச நீதிமன்றம்…
Read Moreதீ வதந்தியால் இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் ஓடிய பயணிகள் மீது இரயில் மோதி 7 பேர் பலி : ஆந்திராவில் பயங்கரம்
11 Alappuzha Dhanbad Express passengers were killed when they ran in the track in which another train crossed from opposite direction and runs over passengers in Andhra Pradesh இரயிலில் தீ பிடித்ததாக பரப்பப்பட்ட வதந்தியால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டு இரயில் நின்றவுடன் கீழே குதித்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு இரயில் மோதி 11 பேர் பரிதாபமாக நசுங்கி செத்தனர். கேரளாவில் உள்ள ஆலப்புழா எனும் ஊரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் ஊருக்கு, தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் , ஒடிசா, மற்றும் பீகார் வழியாக ஜார்கண்ட் சென்றடையும். ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்…
Read Moreசிறையிலிருந்தே பேஸ்புக் புகைப்படம் விடியோ போஸ்ட் செய்த கைதி
Punjab inmates assault prisoner upload video on Facebook பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளியை அடித்து உதைப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் கபூர்தலா சிறையில் உள்ள குற்றவாளிகள் தங்களது மொபைலில் பேஸ்புக் போன்று உள்ள பல சமூக வலைதளங்களை உபயோக படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளி ஒருவரை அடித்து உதைத்து,அதை வீடியோ படம் எடுத்து தனது பேஸ்புக் அக்கௌண்டில் பதிவேற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஓர் கொலை வழக்கு உட்பட 31 குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு கபூர்தலா சிறையில் அடைக்கபட்டிருக்கும் சுக்கா கஹ்லோ என்ற குற்றவாளி அவருடைய மொபைலில் தனது சக…
Read Moreபெண்ணின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்த உ.பி காவல்துறை
Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகரில் நில பிரச்சினை காரணமாக கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பெண்கள் என்று பார்க்காமல் சகோதரிகளை தலைமுடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து அடித்து உதைத்தது பெரும் அதிர்ச்சியையும் பதபதைப்பை உண்டாக்கியுள்ளது. ஒரு கிராமத்தில் நில பிரச்சினை காரணமாக இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள் சகோதரிகள் இருவர் மற்றும் இவர்களுடைய சகோதரன் ஆகியோரை கைது செய்தார்கள். காவல் நிலையத்தில் சகோதரனை காவல் துறை அதிகாரிகள் கண்மண் தெரியாமல் அடிப்பதை பொறுத்துகொள்ள முடியாத சகோதரிகள் இருவர் தனது சகோதரனை காப்பாற்ற முற்பட்டார்கள். இதனால் கோபமடைந்த காவல்துறையை சார்தவர்கள் அவ்விரு பெண்களின் தலை முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று…
Read Moreஅதிகாரிகள் அடிக்கடி இடமாற்றத்தை தவிர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
IAS officers minimum tenure posting : on Thursday, the Supreme Court have drastically reduced political pressure on top bureaucrats by ordering that they should get an assured minimum tenure in their posting. மாநில அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலைசெய்யும் காலஅளவை மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதை வரும் 3 மாதங்களுக்கும் மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மேல் உள்ள அரசியல் எஜமானர்களுடைய தனிச்சையாக ஆதாரமின்றி சொல்லும் உத்தரவுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றி நடைமுறை படுத்தவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. ஐ.ஏ எஸ். அதிகாரிகளுடைய பணி நியமனமும் பணியிட மாற்றமும் முடிவு செய்து நடைமுறைபடுத்த சிவில் சர்வீஸ்…
Read Moreஓடும் பேருந்தில் தீ! ஆந்திரா மாநில விபத்தில் 30 பயணிகள் சாவு
accident near Nagari : 30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh on the way from Bangalore to Hyderabad நகரி :- ஆந்திரா பிரதேசத்தில் உள்ள ‘மெகபூப்’ நகரில் தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பற்றி கொண்டு எரிந்து விபத்துக்கு உள்ளானதில் 30 பயணிகள் கருகி பலியாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திரா பிரதேச தலைநகர் ஹைதராபாத்திற்கு பயணமாகிக்கொண்டிருந்த ஒரு தனியார் பஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மெகபூப் நகர் என்னும் ஊரில், சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி தீப்பிடித்து எரியத்துவங்கியது. இந்த தீ விபத்தில் 30 பயணிகள் பரிதாபமாக கருகி பலியானார்கள் என நம்பதகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கருகி மற்றும் சுவற்றின் மேல் மோதியதால் காயம்…
Read More