பள்ளி பாடப்புத்தகங்களில் என் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக்கூடாது – பிரதமர் நரேந்திர மோடி

Chapter on Prime Minister Narendra Modi in school textbooks :  Prime Minister Narendra Modi has opposed the move of some BJP-ruled state governments to include a chapter on his life in school textbooks. பள்ளி பாடப்புத்தங்களில் பிரதமர் நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை சரித்திரத்தை சேர்ப்பதற்கு சில மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இதற்கு நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை போராட்டம்’ எனும் தலைப்பில் பள்ளிப்பாடபுத்தகங்களில் சேர்ப்பதற்கு குஜராத் மாநிலம், மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் அரசியல் பயணங்கள், மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள், வாழ்க்கையில் இவர் பிரதமந்திரி வரையில் சென்ற நிலை பற்றி பள்ளி பாடம் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த…

Read More பள்ளி பாடப்புத்தகங்களில் என் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக்கூடாது – பிரதமர் நரேந்திர மோடி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

Woman dies after being ‘pushed’ off train at Jalgoan மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜலேகான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். ரயில் ஸ்டேசனை விட்டு நகர்ந்த பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் தடுமாறு கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து…

Read More மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்

குஜராத் மாநிலத்திலுள்ள 17 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Major fire in Surat commercial building குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்வத் பாட்டியா என்ற பகுதியில் உள்ள 17 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ பிடித்தது. இது சிறிது சிறிதாக மற்ற தளங்களுக்கும் பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது. டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடையின் குடோனாக இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து தீ வேகமாகப் பரவியது. முதலில் கரும்புகை எழுந்து, பிறகு கட்டடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தோ, காயம் குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை. Major fire…

Read More குஜராத் மாநிலத்திலுள்ள 17 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

காஷ்மீரில் இந்திய ராணுவ விமானம் விபத்து விமானி பலி

IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 வகை போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் பைலட் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானம் (மிக்-21) வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தெற்கு காஷ்மீரின் மதாமா என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபகுதியில் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், பைலட், ரகுபன்சி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால், விபத்து குறித்து தகவலறிந்து மீட்புபடையினர் வந்து பைலட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். IAF’s MiG-21 crashes in Kashmir, pilot dead A MIG-21 fighter aircraft of the Indian Air Force…

Read More காஷ்மீரில் இந்திய ராணுவ விமானம் விபத்து விமானி பலி

ஒயிட் பிரிண்ட் என்ற பெயரில் பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை

Upasana Makati, the girl behind India’s first English lifestyle magazine in Braille வாசித்தல் ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தைச் சாத்தியமாக்க எண்ணிக்கையில் அடங்காத பத்திரிகைகள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் சுவாரசியமான எவ்வளவோ நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதை எல்லாம் நாம் வாசிக்க உதவும் வகையில் தருகின்றன பத்திரிகைகள். படிக்கத் தெரிந்தால் போதும் பரவசமூட்ட பல பத்திரிகைகளும், இதழ்களும் காத்திருக்கின்றன. ஆனால் இவை எல்லாமே பார்வையுள்ளவர்களுக்கானதாகவே உள்ளனவே, பார்வையற்றோருக்கும் பத்திரிகை வேண்டுமே என நினைத்தார் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் உபாஸனா மகதி. அவரது எண்ணத்தைச் செயல்படுத்தியால் உருவானதே ஒயிட் பிரிண்ட் என்னும் பத்திரிகை. இது முழுக்க முழுக்க பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட பத்திரிகை. இந்தியாவில் பிரெய்லி முறையில் வெளிவரும் முதல் ஆங்கிலப் பத்திரிகை இது. மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த்…

Read More ஒயிட் பிரிண்ட் என்ற பெயரில் பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை

இந்தியாவில் அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

Ambassador Production Stopped as Power Shifts in Delhi சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய மோரிஸ் ஆக்ஸ்போர்டு காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான்…

Read More இந்தியாவில் அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

உ.பி.யில் 2 ரயில்கள் மோதி விபத்து 20 பேர் பலி

20 feared dead as Gorakhdam Express rams into goods train சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய வேகத்தில் அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தின் அருகேயுள்ள மரங்களில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மோதி சிதறின. இந்த கோர விபத்தில் கோரக்தாம் ரயிலின் 6 பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். அதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறார்கள். கோரக்பூர் மற்றும் கோண்டா ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்தை…

Read More உ.பி.யில் 2 ரயில்கள் மோதி விபத்து 20 பேர் பலி

பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக, கேரள, கர்நாடக முதல்வர்கள்

Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்…

Read More பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக, கேரள, கர்நாடக முதல்வர்கள்

ஒடிஷா மானிலத்தில் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!

Bonda tribe sends its 1st MLA to Assembly இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ‘போண்டா ஹில்ஸ்” என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின்…

Read More ஒடிஷா மானிலத்தில் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…

Read More ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…