young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery இளம் பெண்ணின் இடுப்புப் பகுதியில் புகுந்து மறுபுறம் வெளியே வந்த 3 கட்டட கம்பிகளை, 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 17 வயதுடைய இளம் பெண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். விழுந்த இடத்தில் காங்கீரீட் போடுவதற்காக இரும்பு கம்பிகள் வைக்கபட்டிருந்தன. அதில் விழுந்ததால் 3 கம்பிகள் அவரது இடுப்புப் பகுதியில் குத்தி மறுபுறம் வெளியே வந்தன. அவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreபீகார் மாநிலத்தில் மகளின் காதலனை கண்களைத் தோண்டி கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த தந்தை
Police constable blinds and kills daughter’s lover மகளை ரகசியமாக சந்திக்க வந்த அவரது காதலரை போலீஸ் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமாரும், பாட்னா மாவட்டம் தவ்லத்பூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் அபய்குமார் என்பவரின் மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ராகுலுக்கு வேலை கிடைத்தது. இதனால், பணிக்காக ஹரித்துவார் செல்வதற்கு முன்னதாக காதலர்கள் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, காதலி வீட்டில் அனைவரும் தூங்கியதும் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராகுல். காதலர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை காதலியின் தந்தையான அபய்குமார் பார்த்து விட்டார்.…
Read Moreடெல்லியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 4பேர் உயிரிழப்பு
Building collapses in North Delhi டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும், இதில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், 12 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள இன்டர்லோக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில், மூன்று அடுக்குக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சபடுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்க தீ அணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். தவிர 4 ஜே.சி.பி.க்கள் இடுபாடுகளை மீட்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம்…
Read Moreஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் பீம்பெர்-காலி- காம்பீர் முன்னரங்க நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இருதரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் வீரர்களுக்கு படுகாயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த 17,18-ந் தேதிகளிலும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read Moreமோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?
Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…
Read Moreநூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்
நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார். திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள் திரு. V.…
Read Moreபஞ்சாப் பொற்கோவிலுக்குள் இரு பிரிவினர் இடையே மோதல் பலர் காயம்
Two Groups Clash in Golden Temple, 12 Injured பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் பொற்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரிய போராளிகள் கொல்லப்பட்டனர். இதன் 30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவிலுக்குள் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. தங்களது பாரம்பரிய வாளேந்திய படி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. Two Groups Clash in Golden Temple, 12 Injured Worship has resumed at the Golden Temple in…
Read Moreமத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
Abolishing Empowered Group of Ministers by Modi. நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 21 அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுவதற்கு முன், சில முக்கிய அமைச்சர்களைக் கொண்ட சிறு குழு ஒன்று அது பற்றி பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவது முந்தய அரசின் வழக்கத்தில் இருந்தது. அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்கள் குழுக்கள்…
Read Moreபள்ளி பாடப்புத்தகங்களில் என் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக்கூடாது – பிரதமர் நரேந்திர மோடி
Chapter on Prime Minister Narendra Modi in school textbooks : Prime Minister Narendra Modi has opposed the move of some BJP-ruled state governments to include a chapter on his life in school textbooks. பள்ளி பாடப்புத்தங்களில் பிரதமர் நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை சரித்திரத்தை சேர்ப்பதற்கு சில மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இதற்கு நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை போராட்டம்’ எனும் தலைப்பில் பள்ளிப்பாடபுத்தகங்களில் சேர்ப்பதற்கு குஜராத் மாநிலம், மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் அரசியல் பயணங்கள், மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள், வாழ்க்கையில் இவர் பிரதமந்திரி வரையில் சென்ற நிலை பற்றி பள்ளி பாடம் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த…
Read More