நாசாவில் புதிய 8 விண்வெளி வீரர்கள்: அதில் பாதி பேர் பெண்கள்

NASA announces 8 new astronauts : 4 Women ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில், சூரிய குடும்ப ஆராய்ச்சிக்காக புதிய தலைமுறை விண்வெளி ஆராய்சியாளர்கள் தேர்வு செய்ய பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள். முன்னதாக சுமார் 6000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8 பேர் மட்டுமே தெர்தெஉக்க பட்டனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிக அளவில் பெண்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. நாசாவின் தலைமை நிர்வாகி திரு சார்லஸ் போல்டன் கூறுகையில், அமெரிக்காவின் இந்த புதிய முயற்சி வான்வெளியில் முன் எப்போதும் இல்லாத திடமான புதிய திட்டமாக திகழும் என குறிபிட்டுள்ளார். புதிய விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என நாசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NASA announces 8 new astronauts English Summary: Nasa…

Read More

வட இந்தியாவில் பேய் மழை.132 பேர் பலி?.

Flood in UTTARAKHAND North india: வட இந்தியாவின் உத்திரகாந்த் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெல்ல பெருக்கு ஏற்பட்டு, நூற்றுகணகானோர் பலியாகியுள்ளனர். மேலும் இமாலய மலையடிவாரபகுதிகளில் நிலச்சரிவினாலும் பலர் பலியாகியும், மீட்புபணிகள் பாதிக்கப்பட்டும் இருக்கிறது. மேலும் லட்சக்கணக்காண மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும், இழந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளுக்கு உதவியாக  இராணுவ வீரர்கள் பலர்  ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 75,000 பயணிகள் சிக்கிக்கொண்டு மீட்பு குழுவினர் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் என நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  Flood in UTTARAKHAND North india:  The holy town of Kedarnath, standing at a height of 11,760 feet and surrounded by majestic snow-capped peaks, was a picture of devastation…

Read More

தமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்

New Tamilnadu ministers of aiadmk  Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான்  மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர்  தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக  துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல்  மரபினர்  அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…

Read More

காலை இழந்த அருனிமா எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

arunima sinha, first amputee to climb Mount Everest தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கிய அருனிமா சிங்கா தன் ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25). உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை தைரியத்துடன் விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை. இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள் , ஓடும் ரயிலில் இருந்து வெளியே அருனிமாவை தூக்கி வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை…

Read More

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை

தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். இன்று முதல்வர் ஜெயலலிதா தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி(சேமிப்பு கிடங்கு கழகம்), வி.என்.ரவி(ஜவுளி கழகம்), பிரபாகர்(சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன்(சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன்(பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன்(வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன்(தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8…

Read More

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

england prince william indian origin இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம் தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது. ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால் வில்லியம்ஸ் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது. england prince william indian origin

Read More

மோடியின் அடுத்த கட்ட வியுகம்: பா.ஜ.க. வின் தொகுதிகள் முதல் குறி

பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி அடுத்த வியுகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. முதல் கூட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், மஹாராஜ் கஞ்ச், டியோரியா, கோராக்பூர், குஷி நகர், வாரணாசி, பால்லியா, துமாரிகஞ்ச், பஹ்ரியாச், சுல்தான்பூர், லகிம்பூர், தவுர்ஹரா, லக்னோ உன்னாவ், கான்பூர், காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளி பிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார். 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. 2004 மற்றும் 2009…

Read More

கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா

மத்திய  கேபினட் அமைச்சர்கள் ஜோஷி, அஜய் மக்கான் ஆகிய இருவரும் சனிக்கிழமை (15/06/2013) இரவு தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் மத்திய அமைச்சரவை  திங்கட் கிழமை மாலையில் மாற்றியமைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று சி.பி. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தரைவழி போக்குவரத்து மற்றும் ரயில்வே ஆகிய இரண்டு இலாக்காக்களை தன்வசம் வைத்திருந்தார். அஜய் மக்கான் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தார். கட்சிக்காக பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சரவை  நாளை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 வது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மன்மோகன்சிங் இந்த வாய்ப்பை…

Read More

மொளச்சூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலி

திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் கிராமப் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதால் திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளை யொட்டி கொடிக்கம்பம், கல்வெட்டு இன்று திறக்கப்படுவதாக இருந்தது. அதற்கான ஆயத்த பணிகள் நேற்று இரவு நடந்தது. கட்சியின் தோரணங்கள், அலங்கார பணிகளும் செய்யப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு மொளச்சூர் பகுதி 45வது வார்டு திமுக கிளைச் செயலாளரும், அரசு பேருந்து ஓட்டுநரும் ஏ.பாஸ்கர் (வயது 45), 12வது வார்டு கிளைச் செயலாளர் சி. முருகன் (வயது 45), 6வது வார்டு கிளைச்செயலாளர் டி.பாஸ்கர் (வயது 43) ஆகிய மூவரும் இரும்பினால் ஆன கொடிக்கம்பத்திற்கு கருப்பு-சிவப்பு வர்ணம் பூசி அந்த கொடிக்கம்பத்தை கல்வெட்டின் மீது பதிப்பதற்காக…

Read More

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்  வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வசதி துறை சார்ந்தோர், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகளுடன்  கலந்துகொண்ட கூட்டம் நேற்று தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும் என்றும்  கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும்  உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மேலும் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும் கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும்  வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து…

Read More