China knife attack: Police arrest suspect in bus rampage சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும்,…
Read Moreஅதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்
A BLIND former British soldier has vowed to break the 200mph barrier — on a motorbike இங்கிலாந்தில் கண்பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார். அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார். A BLIND…
Read More610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்
Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார். சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். English News Summary: 610 kg Saudi man…
Read Moreசீனாவில் யாஹூ இணையதளத்தின் இமெயில் சேவை நிறுத்தம்
Yahoo email service stopped in china சீனாவில் இ மெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக ‘யாஹூ‘ இணையதளம் அறிவித்துள்ளது. சீனாவில் இணைய தளங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு எதிரான வெப்சைட்டுகளை சீன அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தனது இ மெயில் சேவையை இந்த மாதம் 31ம் தேதி நிறுத்தி கொள்ள போவதாக யாஹூ இணையதளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாகூ இ மெயில் வழியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். English Summary: Yahoo email service stopped in China Yahoo’s email service in China has shut down, with a note on its log-in page asking users to…
Read Moreதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம்
DMK leader M.karunanidhi’s letter to prime minister திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும். இதேபோல் இரண்டாவது…
Read Moreகாரைக்கால் விநோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள்
காரைக்கால்: காரைக்கால் வினோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வினோதினி கொலை வழக்கில் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி சுரேஷுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதியினி குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த வினோதினி பிப்ரவரி 12ல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Read Moreவெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் புதிய வரி
new tax for importing electronics வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு…
Read Moreஅக்டோபர் மாதம்15ம் தேதிக்குள் மகளிர் வங்கிகள் துவக்க முடிவு
Women banks decided to start before October 15 முழுவதும் பெண்களால் இயக்கப்படும் மகளிர் வங்கிகள் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் சென்னையில் திறக்கப்படும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, நாட்டிலேயே புதுமையாக முழுவதும் பெண்களால் இயக்கப்படும் , பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் வங்கிகள் துவக்கப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, இந்தூர் மற்றும் கவுகாத்தி நகரங்களில், மகளிர் வங்கிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பார்லிமென்டில் சமீபத்தில் 1,000 கோடி ரூபாய் துவக்க முதலீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மகளிர் வங்கி துவக்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் சென்னை உட்பட ஆறு இடங்களில் மகளிர்…
Read More2023-ல் செவ்வாய் கிரகம் செல்ல பெங்களூர் வாசிகள் முன்பதிவு
நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. லாப நோக்கில்லாத இந்த அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும். செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம்பிப்பது முதல், அங்கு சென்று வாழும்வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது…
Read Moreகச்சத்தீவை தரமுடியாது: இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை இந்தியாவுக்கு தரமுடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பித் தரும் பேச்சுக்கே இடமில்லை. இருநாட்டு பிரதமர்கள் செய்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யமுடியாது. இலங்கையில் தேர்தலை கண்காணிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு கொடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தலை வெளிப்படையாக நடத்த விரும்புகிறோம். இலங்கையில் போருக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 145 வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் போரின்போது…
Read More



