Sikh man to get $50,000 in religious discrimination case தாடி வைத்திருந்ததன் மூலம் சீக்கியர் என அடையாளம் கண்டு கொண்ட அமெரிக்கக் கார் நிறுவனம் ஒன்று, வேலை வேண்டி வந்தவருக்கு தாடியை எடுத்தால் வேலை தருவதாக நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட சீக்கியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ31,25,500 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியர் குர்ப்ரீத் கெர்ஹா. இவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை வேண்டிச் சென்றார். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற கெர்ஹாவுக்கு, அந்த நிறுவனம் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தது. அதாவது, அவர், தனது தாடியை நீக்கிவிட்டு உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் அது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெர்ஹா, தன் மத சம்பிரதாயங்களை மீறியவகையில் தாடியை எடுக்க…
Read Moreஉலகில் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை : உலக வங்கி ஆய்வறிக்கை
250 crore of people in this world live without toilet facility சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை… இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப்…
Read Moreஆப்பிரிக்க நாட்டு போதை பொருள் கடத்தல்காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது
Drug pill bursts in tummy, kills smuggler ஆப்பிரிக்க நாடு போதை பொருள் கடத்தல் காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது : மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார். ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. பிறகு அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி…
Read Moreகுஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி
Murder accused hurls shoe at judge, abuse him in courtroom குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி : குஜராத் மாநிலம் பூஜ் கோர்ட்டில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கொலைக்குற்றவாளி ஒருவர் நீதிபதி மீது ஷூவை கழட்டி வீசியடித்தது பெரும் பரபரப்புக்குள்ளானது. மேலும் நீதிபதியை கடுமையாக தகாத வார்த்தைகளால் அவர் ஏசியதாகவும் அருகிலிருந்த போலீஸ் தரப்பு கூறியுள்ளது. ஆனால் நல்லவேளையாக ஷூ ஜட்ஜ் மீது படவில்லை. அந்த நீதிபதியின் பெயர் எம்.டி. ஆச்சார்யா, இவர் கொலைக்குற்றவாளியின் வழக்கில் தீர்ப்பு வழங்கயிருந்தபோது இந்த ஷூ வீச்சு நடந்தது. ஷூ வீசிய கொலைக்குற்றவாளி பெயர் கசம் அகமட், இவர் 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினர் ஒருவரை கொலை செய்ததாக வழக்கு நடைபெற்றது. ஷூ வீச்சினால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பு கூறும் முன்னர் ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதோடு மட்டுமல்லாது…
Read Moreநவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினமக அனுஷ்டிக்கப்படுகிறது
Today marks World Television Day உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும். இந்த…
Read Moreசெவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்
Scientists find evidence of granite on Mars செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது. இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும்…
Read Moreநரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க கூடாது என அமெரிக்க எம்.பி பார்லிமெண்டில் தீர்மானம்.
American MP Keith Ellison called on a Resolution in American parliament to continue denying visa to Narendra Modi by US government வாஷி்ங்டன்: அமெரிக்க பார்லிமெண்ட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா வழங்கக் கூடாது என்று, அமெரிக்க எம்.பி யான., கெய்த் எலிசன், தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில், இந்தியாவி்ல் இருக்கும் சிறுபான்மையினர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடிக்கு, விசா தர அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கெய்த் எலிசன், ஜனநாயக கட்சி சார்பில் ‘மின்னசோட்டா’ வில் வெற்றி பெற்றவர். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர் தான் அமெரிக்க வரலாற்றில் செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்மாகும். American MP Keith…
Read Moreபெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர் பெண் மீது அருவாள் தாக்குதல்
Caught on CCTV: woman attacked inside unguarded ATM in Bangalore பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை, மர்ம நபர் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற காட்சி காணொளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய (37) .ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 7.10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார். இந்நிலையில் ஜோதி பணம் எடுக்கும்வரை காத்திருந்த மர்ம நபர் ஒருவர் சட்டென்று உள்ளே புகுந்து ஏ.டி.எம். ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். ஆனால் அவரை தடுத்து…
Read Moreசன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை
Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ…
Read Moreஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வயது நிரம்பிய பெண் குழந்தை எரித்து கொலை
2 year old girl child killed brutally in Srivilliputhur over the vengeance of illegal contact of the child’s father with his neighbor விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடைய கணவன் மனைவியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புள்ளவர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்பட்டியின் கீழத்தெருவைச் சார்ந்தவர் திரு. எஸ்.கண்ணனுடைய மகன் திரு.சங்கர். திரு.சங்கர்,அங்குள்ள மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் வேன் நடத்துனர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.செல்வி. இந்த தம்பதியருக்கு கருப்பசாமி (வயது 5) என்ற மகனும், இந்து காவியா (இரண்டே…
Read More



