செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

Scientists find evidence of granite on Mars செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது.  இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும்…

Read More