Students in India has increased world wide said a Statistical research உலகளவிலாவியபுள்ளி விவரஆய்வொன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் வருவதாக தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலிருப்பதுஅனைவருக்கும் தெரிந்து. அதே சமயம் ஆய்வு அறிக்கையொன்றில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியன்என வெளியாகியுள்ளது. இதுகிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையான 318 மில்லியனைநெருங்குகிறது. மேலும் ஆய்வில்,சீனா மாணவர்களின் எண்ணிக்கை 252 மில்லியன்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாஉலகளவில் மாணவர்களின் எண்ணிக்கையில்நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்கள் மேலும் இந்தியாவில் பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் ஆறு மாதத்திற்கு மேல் எவரும் ஒரேதொழிலில் நீட்டித்திருப்பதி்ல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் காரணத்தால் பணியில் ஈடுபடுவதாகவும், அவ்வாறுஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில்…
Read MoreYear: 2014
72 மணிநேரம் கழித்து இடிபாடுகளில் இருந்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே
After 72 hours under rubble, man emerges asking for his slippers மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் சிக்கிய இடத்தில் மோப்ப நாய் குரைத்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். அப்போது தான் அங்கு…
Read Moreசென்னையில் முப்பத்தி ஐந்து ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்
thirty five thousand buildings chennai were constructed illegally சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அக்கட்டிடத்தில் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே கட்டிட விபத்திற்கு இடி விழுந்தது தான் காரணம் என கட்டுமான நிறுவனம் கூறினாலும், ஏரி நிலத்தில் 11 மாடி கட்டியதே முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இடிந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மற்றொரு 11…
Read Moreஇளம் பெண்ணின் இடுப்பில் குத்திய 3 இரும்பு கம்பிகள் 10 மணி நேரம் போராடி மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்
young girl bihar 3 rods construction worker accident clinic doctors surgery இளம் பெண்ணின் இடுப்புப் பகுதியில் புகுந்து மறுபுறம் வெளியே வந்த 3 கட்டட கம்பிகளை, 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 17 வயதுடைய இளம் பெண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். விழுந்த இடத்தில் காங்கீரீட் போடுவதற்காக இரும்பு கம்பிகள் வைக்கபட்டிருந்தன. அதில் விழுந்ததால் 3 கம்பிகள் அவரது இடுப்புப் பகுதியில் குத்தி மறுபுறம் வெளியே வந்தன. அவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
Read Moreபாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை தலையை வெட்டி கொலை
Newly-wed couple killed in public over love marriage in Pakistan பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை அந்தப் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவர்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய முவாபியா பீபி. அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சாஜத் அகமத் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முவாபியா கடந்த 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார். முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் சென்றனர். அங்கு அவர்கள்…
Read Moreஇந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரெளடி வெட்டிக் கொலை
Rowdy dies after attack in GRH சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரௌடி பொக்கை ரவி திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொக்கை ரவி (35). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ரவி, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூட நீக்கியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரவி திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாந்தகுமார், தமிழச்செல்வன் ஆகியோருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், திடீரென பொக்கை ரவியை அரிவாளால்…
Read Moreமதுரை மக்கள் குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் விரக்தியில் உள்ளனர்
People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13 மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் மக்கள் விரக்தியில் உள்ளனர். கோமதிபுரம், மேலமடை, சதாசிவம் நகர், தாசில்தார்நகர் உட்பட்டப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் மேலமடை ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தபோது 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியாக மாறிய பின்னர் எந்த வசதியும் இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுயுள்ளனர். திரு. ராமசுப்பு, கோமதிபுரம் தென்றல் நகரின் குடியிருப்போர் சங்க தலைவர் கூறியதாவது: இங்கு குடிநீர் பிரச்சனை விஸ்வரூபமாக உள்ளது. வண்டியூர் கண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயிலிருந்து தண்ணீரை லாரி லாரியாக எடுத்தாலும், எங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் எங்கள்…
Read Moreமுகலிவாக்கம் பெற்றோர்கள் அரசு உயர்நிலை பள்ளியின் தரம் உயர்த்திட பெற்றோர் குற்றம் சாட்டு
Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School முகலிவாக்கத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தநடவடிக்கை எடுக்கவில்லை என்றுகல்வி அதிகாரிகளின் மீது, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டு. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில்325 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்து இங்கு படிக்க வருகின்றனர். நடவடிக்கை இல்லை : இங்கு 10ம் வகுப்பு முடிக்கும்மாணவர்கள், பிளஸ் 1 படிக்க, முகலிவாக்கத்திலிருந்து, போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதிகளிலுள்ளஅரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படிக்கவேண்டியுள்ளது. இவை முகலிவாக்கத்திலிருந்து 3ல் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமாகும். அதலால் இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக…
Read Moreபீகார் மாநிலத்தில் மகளின் காதலனை கண்களைத் தோண்டி கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த தந்தை
Police constable blinds and kills daughter’s lover மகளை ரகசியமாக சந்திக்க வந்த அவரது காதலரை போலீஸ் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமாரும், பாட்னா மாவட்டம் தவ்லத்பூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் அபய்குமார் என்பவரின் மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ராகுலுக்கு வேலை கிடைத்தது. இதனால், பணிக்காக ஹரித்துவார் செல்வதற்கு முன்னதாக காதலர்கள் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, காதலி வீட்டில் அனைவரும் தூங்கியதும் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராகுல். காதலர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை காதலியின் தந்தையான அபய்குமார் பார்த்து விட்டார்.…
Read More