மும்பை விமான நிலையத்தில் முன் அனுமதி கடிதம் பெறாத ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் பறிமுதல்

Miss Asia Pacific World 2013 Srishti Rana’s crown seized at Mumbai airport இந்த ஆண்டின் ஆசிய பசிபிக் அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய அழகியின் வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 30 ஆம் தேதி தென் கொரியாவில் இருக்கும் புஷன் நகரில் ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இதில் 21 வயது இந்தியா அழகி சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு வைரங்கள பதித்தப்பட்ட கிரீடம் ஒன்றை கடந்த ஆண்டு இந்த அழகி போட்டியில் வென்ற ஹிமாங்கினி சிங் யாது சூட்டினார். மிகவும் சந்தோஷத்தோடு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவிற்கு…

Read More

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் 100வது பிறந்த நாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம்

Riverside County man skydives on 100th birthday   100 வயதான ஒரு முதியவர் அமெரிக்காவில் தனது 100வது பிறந்த நாளில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாகசம் செய்து சாதனை படைத்துள்ளார். தென் கலிபோர்னியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு. நேற்று இவர் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். கார் வியாபாரியான இவர் இந்த 100 ஆண்டுகளில் உன் வாழ்வில் என்ன செய்ய விரும்பினாய் என இவரது நண்பர்கள் கேட்டதற்கு உற்சாகமாக பதிலளித்த முதிய இளைஞர் வெர்னான், தான் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்யவேண்டுமென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதியவர் வெர்னானின் தனது பிறந்த நாளான நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் பெர்ரிஸ் நகரில் வானத்தில் பறந்த விமானத்தில் 13,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து…

Read More

கோவில்பட்டியில் 5 பேர் கொண்ட கும்பலால் 2 பேர் வெட்டி கொலை

Two friends were hacked to death in Kovilpatti by a 5 member gang தென் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொழில் நகரங்களில் ஒன்றான கோவில்பட்டியில், ஐந்து பேர் கொண்ட கும்பல்  2 நண்பர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது. பாலமுருகன் கோவில்பட்டியைச்சேர்ந்தவர். இவருடைய நண்பரின் பெயர் முருகன். பாலமுருகன் கோயில்பட்டி நகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த இரு நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து, அவர்கள் 5 பேரும் சேர்ந்து பாலமுருகனையும் முருகனையும், சரமாரியாக அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களைக்கொண்டு வெட்டிச்சாய்த்தனர். இந்த பயங்கர தாக்குதலில் இரு நண்பர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்கள். municipality staff and his friend were killed a…

Read More

நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…

Read More

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு ஆள்மாறாட்டதை தடுக்க புதிய திட்டம்

Photos taken in Register office in Chennai through Web camera to ovoid forgery : Chief minter jayalalitha order implemented சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு துறை ஆள்மாறாட்டத்தை தடுக்கும் நோக்கில் அங்கு புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கவும் அதனால் பதிவு செய்பவர்கள் மனநிறைவு பெறவேண்டும் என்பதற்காகவும் பத்திரப்பதிவு துறை அலுவலக தினசரி நிகழ்வுகளை வீடியோ காமரா வழியாக கண்காணிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதற்காக, சுமார் 578 சார் பதிவாளர் அலுவகங்களிலும் 3 முகாம் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு நடக்கும் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா வழியாக புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் முறையாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கென “எல்காட்” நிறுவனம் இரண்டு கண்காணிப்பு…

Read More

தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு

Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district  தீபாவளி திருநாளையொட்டி மகளை தன் வீட்டுக்கு அனுப்பாததால் அத்திரம் அடைந்த மாமனார் தனது மருமகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாம்பவர்வடகரையில் சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் தங்கசாமியின் மகன் சக்திவேல். இவர் அதே ஊரில் உள்ள தேரடி தெருவில் இருக்கும் இராமசாமி என்பவருடைய மகள் முத்துமாரியை திருமணம் செய்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி மகளையும், மருமகனையும் தன் வீட்டுக்கு அழைக்க இராமசாமி, சக்திவேல் இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர், தம்பதிகளை தீபாவளிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மாப்பிளையோ தான் வரமுடியாது என்றும் மனைவி முத்துமாரியையும் அனுப்பமுடியாது என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில்…

Read More

குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

Play-i – The New Generation Robots for Children to learn computer Programming   இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது. ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது…

Read More

பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்

NIA captured 27 Live Bombs in Jharkhand Lodge related to Patna Serial Powerful Bomb Blasts பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் மீதமுள்ள 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர். பா ஜ க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புள்ள ஹைதர் அலி தங்கி இருந்த  ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ஹோட்டலில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நேற்று சோதனை…

Read More

“சூப்பர் பக்’ கிருமிகளால் தொற்றுநோய் பலிகள் உயரும் அபாயம்

  superbug antibiotics and multinational pharmaceutical companies : Money minted by drug manufacturers particularly, Killer super bug antibiotics and multinational pharmaceutical companies all over the world நோயற்ற வாழ்வு ஒரு மிகபெரிய வரம், நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஏண்டிபயாட்டிக்) கட்டுப்படுத்த முடியாத எவரும் அறியபடாத தொற்றுநோய் பரவலால் உண்டாகும் சாவு எண்ணிக்கை பூமியில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நோயாளிகள் இறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதற்கு புதிய நோய் எதிர்ப்பு ஆய்வுகளோ, இன்றைய நிலைக்கு தேவையான மருந்து கண்டுபிடிப்புகளோ, புதிய மருத்துவ ஆராய்ச்சிக்கான முதலீடுகளோ பெரும்பாலும் இல்லாதது தான் காரணம். ஐக்கிய நாடுகள் சபையின் உலக நலவாழ்வு அமைப்பு இதற்கு முன்பே இதுபற்றி விடுத்துள்ள அபாய எச்சரிக்கையில்,சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகள்,…

Read More

அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது. சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு…

Read More