அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்

US woman turns up alive after her own funeral   அமெரிக்காவில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டு இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஒரு பெண் உயிரோடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலடெல்பியாவை சேர்ந்த 50 வயது பெண்ணான ஷரோலின் ஜாக்சன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.கடந்த மாதம் 20 ஆம் தேதி, தெருவில் கிடந்த ஒரு சடலத்தை ஷரோலின் ஜாக்சன் என அவரது மகன் மற்றும் ஒரு சமூக சேவகர் அடையாளம் காட்டி சடலத்தை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்து புதைத்துள்ளனர்.  இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஷரோலின் ஜாக்சன் ஒரு மருத்துவமனையில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிந்த பிறகு, யாருக்கு இறுதி…

Read More

திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEO

microsoft ceo steve ballmer retire soon அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மர் பதவி வகித்து வருகிறார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சின் நீண்டநாள் நண்பரும், நம்பிக்கைக்குரியவரும் ஆவார். இந்நிலையில் ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சிஇஓ தேர்வு செய்யப்படும்வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடித்திருப்பார். புதிய சிஇஒ தலைமையின் கீழ் புதிய உத்திகளுடன் சந்தையில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. microsoft ceo steve ballmer retire soon In a surprise move, Microsoft on Friday announced that CEO Steve…

Read More

மசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி

Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli திரிபோலி:லெபனானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியானார்கள்.   லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவினர் ஹெஸ்போலாக் என்ற அமைப்புடன் சேர்ந்து சன்னி பிரிவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதரப்பினரிடையே இதுவரை நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் லெபனான் திரிபோலி நகரத்தில் உள்ள தாஹ்வா மசூதியில் ஏராளமான சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த பரபரபரப்பு அடங்கும் முன்பு சில நிமிடங்களில் அல் சலாம் மசூதி அருகே மற்றொரு குண்டு…

Read More

ஆப்பிளின் அடுத்த படைப்பு கை கடிகாரம் விரைவில்

apple new iwatch coming soon ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது . தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் ஆப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதனை செல்போண்ணுக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே ஆப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ இணைப்பு    apple new iwatch coming soon We know that Apple is working on their new Apple iWatch, although we have no idea what the device will look like. The following…

Read More

ஒபாமாவை திணற வைத்த இளம் பெண்

obama questioned by a young lady அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றிய போது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் எழுந்து, “பிராட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பினார். அவர் தொடர்ந்து தனது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதனால், தனது உரையை சில நொடிகள் நிறுத்திய ஒபாமா, “நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது” என்று தெரிவித்தார். அப்போதும், அந்தப் பெண் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்பெண்ணை உட்காருமாறு சத்தம் போட்டனர். ஆனால், ஒபாமா குறுக்கிட்டு, “அமைதியாக…

Read More

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலி

1300 civilians killed in Syria சிரியாவில் அரசுப்படையினர் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறியாமலேயே பலர் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது.…

Read More

மலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி

Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30…

Read More

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

India, US bank on Manmohan visit to boost ties அடுத்த மாதம் ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். வாஷிங்டன்னில் பிரதமரின் பயண ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசுடன், ஆலோசனை நடத்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், பருவநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் கலந்து கொள்கிறார்.  India, US…

Read More

அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’

நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர். During a family trip to the beach last month, 4-year-old Paul Franklin fell and scraped his right knee. That’s not unusual; little boys do all the time. It’s what emerged from his swollen knee that makes this a tale worth telling: a snail. Paul…

Read More

கடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்

Vanuatu Postal Station Underwater நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால்  இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது. வனுவாத்தூ தபால் நிலையம்  நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது. ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர். வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இங்கிருந்து அனுப்பபடும்…

Read More