சீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்து

China knife attack: Police arrest suspect in bus rampage சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும்,…

Read More

அதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்

A BLIND former British soldier has vowed to break the 200mph barrier — on a motorbike இங்கிலாந்தில் கண்பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார். அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார். A BLIND…

Read More

610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்

Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார்.  சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். English News Summary: 610 kg Saudi man…

Read More

சீனாவில் யாஹூ இணையதளத்தின் இமெயில் சேவை நிறுத்தம்

Yahoo email service stopped in china சீனாவில் இ மெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக ‘யாஹூ‘ இணையதளம் அறிவித்துள்ளது. சீனாவில் இணைய தளங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு எதிரான வெப்சைட்டுகளை சீன அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தனது இ மெயில் சேவையை இந்த மாதம் 31ம் தேதி நிறுத்தி கொள்ள போவதாக யாஹூ இணையதளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாகூ இ மெயில் வழியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். English Summary: Yahoo email service stopped in China  Yahoo’s email service in China has shut down, with a note on its log-in page asking users to…

Read More

ஜப்பானின் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து

Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது. இதனால் எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லைட் போட்டு சென்றன. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக்குழம்பானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. இந்த ஆண்டில் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து சிதறியது என்று கூறப்படுகிறது. Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. Buying,…

Read More

விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்

போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார். மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி…

Read More

அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25). இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயிலுள்ள நோபல் பரிசு அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய பிராட்லி மேன்னிங்கிற்கு நோபல் பரிசு…

Read More

இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்­துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விம­ல­ஜோதி தேரர் பேச்சு

Srilanka Religious issue இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர்  பேச்சு  இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார். பொது ­ப­ல­சே­னா வின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்­லா­விடின் அவர்­களை ஓட…

Read More

ஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்து

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார். அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார். ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின்…

Read More

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை

Nobel prize winner for peace, Tawakkul Karman Denied Entry Into Egypt   ஏமனை சேர்ந்த தவக்கோல் கம்ரான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முர்சிக்கு அவரது ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தவக்கோல் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க நேற்று எகிப்து வந்தார். தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. உடனே அவர் மற்றொரு விமானம் மூலம் ஏமனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு முர்சியின்…

Read More