இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்­துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விம­ல­ஜோதி தேரர் பேச்சு

Srilanka Religious issue

இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர்  பேச்சு 

இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார்.

பொது ­ப­ல­சே­னா வின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்­லா­விடின் அவர்­களை ஓட ஓடத் துரத்­துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்­பா­டு­களை முஸ்லிம் நாடு­க­ளுக்குச் சென்று மேற்­கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இட­மில்லை என்றும் தெரிவித்தார்.

முஸ்லீம்கள் கூடுதலாக பிள்ளைகளைப் பெற்று தமது இனத்தை பெருக்கி வருவதாக குற்றம் சாட்டிய தேரர் அதைப்போவே பெளத்த குடும்­பத்தில் கூடு­த­லாகப் பிள்­ளை­களைப் பெற வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Srilanka Religious issue

News Courtesy: yarl.com

Related posts