மனித உயிர்களை காப்பாற்ற மாநிலங்களுக்கு இடையே ஆக்ஸிஜன் டேங்கர்களுக்கு சரியான நேரத்தில் பசுமை தாழ்வாரங்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

MP High Court

போபால்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அனைத்து மாநில
அரசுகளுக்கும் அந்தந்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு
அவர்கள் விரும்பிய இடங்களுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை வழங்குவதை
உறுதி செய்வதற்காக, மாநிலங்களுக்கு இடையேயான திரவ மருத்துவ ஆக்ஸிஜனை
ஏற்றிச் செல்லும் டேங்கர்களுக்கு பச்சை தாழ்வாரங்களை வழங்குமாறு
வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி முகமது ரபீக் மற்றும் நீதிபதி அதுல் ஸ்ரீதரன் ஆகியோர்
அடங்கிய பிாிவு அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது: “இந்த நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளையும், அந்தந்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் மூலமாக மாநிலங்களுக்கு இடையே திரவ சம்பந்தமான மருத்துவ ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர்களுக்கு ஆம்புலன்ஸ்க்கு இணையாக பசுமை தாழ்வாரங்களை அந்தந்த இடங்களுக்கு தேவையான ஆக்சிஜன் சரியான நேரத்தில் வழங்கி விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை உறுதி செய்தது”.

ஆக்ஸிஜன் வழங்கல் பற்றாக்குறையால் பல்வேறு இறப்புகளை காட்டும் செய்தித்தாள் அறிக்கைகளையும் நீதிமன்றம் தீவிரமாக கவனித்தது: “ஆக்ஸிஜன் கிடைக்காததால் மருத்துவமனைகளில் பல நபர்கள் இறந்ததாக கூறப்படுவதன் உண்மை தன்மையை மறுக்க அரசு தீவிர முயற்சி எடுக்கவில்லை. குடிமக்களின் இறப்பு எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் உள்ளதோடு அல்லாமல் மனதிற்கு வருத்தமளிக்கின்றது எனவும், காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மிகவும் வேதனைக்குாியது.

Related posts