அமெரிக்காவில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டூத்தீ

Fire crews report progress against massive Yosemite fire   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஸ்தனிஸ்லாஸ் தேசிய பூங்காவில் கடந்த 17–ந்தேதி திடீரென தீ பிடித்தது. பின்னர் இது காட்டுத்தீயாக மாறி பூங்கா முழுவதும் பரவியது. அங்கு தொடர்ந்து வீசி வரும் அனல்காற்றினால் தீ மளமளவென பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க நாடெங்கிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வருகிறார்கள். இந்த தீயினால் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளும் நாசமாகி உள்ளன. தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் சான்பிரான்சிஸ்கோ நகரில்…

Read More

ஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி

wife kills cheating husband with coffee cup in japan 70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை காபிக் கோப்பையால் அடித்தேக் கொன்று விட்டார். ஜப்பானில் தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே. அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த காபிக் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார். பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில்…

Read More

ஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது

Crocodile suspected of snatching man in Australia  ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ‘மேரி ரிவர்’ என்ற ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார்.பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர். அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். Crocodile suspected of snatching man in Australia Police say they have found…

Read More

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை

Indian man shot dead in the US கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99…

Read More

ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது

Uranium shoe man arrested in US அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் யுரேனியம் தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் உலகம் முழுவதும் ‘எல்லோ கேக்’ என்று அழைக்கப்படும் ‘யுரேனியத்தை யாரேனும் விற்க தயாராக இருக்கிறீர்களா. எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்க தயார் என்று விளம்பரத்தை வெளியிட்டவர் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்ட பேட்ரிக் கேம்பல் என்பவர், தனக்கு தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவற்றை விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உலகின் எந்த மூலைக்கும் தன்னால் யுரேனியத்தை கொண்டு சென்று விற்க முடியும் என்றும் விளம்பர நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு, Ôஈரானுக்கு கொண்டு செல்ல முடியுமா’ என விளம்பரம் வெளியிட்டவர் கேட்டுள்ளார். ‘ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு யுரேனியத்தை 1000 கிலோ வரை கடத்தி சென்று சப்ளை செய்ய முடியும்’…

Read More

ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்

Japan woman ties herself up to skip work  ஜப்பானில் அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லாத ஒரு பெண் தன்னை தானே கட்டிப்போட்டு கொண்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். கால்களும், கைகளும் கயிற்றில் கட்டப்பட்டு அப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததை அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெண்ணை கட்டிப்போட்டு விட்டு வீட்டை திருடர்கள் கொள்ளையடித்திருக்ககூடுமென எண்ணிய அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல…

Read More

மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்

Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops   புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி…

Read More

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி

Iraq suicide bomber kills at least 28 people  ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியான அல் – கஹிராவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பூங்காவில் வெடிகுண்டுகளை அணிந்த நபர் ஒருவர் தற்கொடைப் படை தாக்குதலை நடத்தியிருக்கிறான். இத்தாக்குதலில் பூங்காவில் இருந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Iraq suicide bomber kills at least 28 people At least 28 people were killed and 36 others wounded in a suicide bombing in Iraq on Friday evening. Police officials in Baghdad said a man wearing an…

Read More

பொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலி

Violence in Bolivia jail takes 30 lives   பொலிவியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம்  ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். பொலிவியாவின் சான்டா குரூஸில் இருக்கிற பால்மசோலா சிறைச் சாலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. இந்த வன்முறையின் போது சிறைக்குள் இருந்த ப்ரோபோன் வாயு டேங்குகளை கைதிகள் சிலர் தீயிட்டனர். மேலும் பலரை எரித்தும் கொன்றுள்ளனர். இந்த மோதலில் 18 மாத கைக்குழந்தை உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு யார் தலைவராக இருப்பது என்ற மோதலிலேயே இந்த கலவரம் மூண்டதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொலிவியா அரசு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கள் பெற்றோருடன் சிறையில் இருக்க…

Read More

நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை

Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack   நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 41 பேரின் குரல் வளையை அறுத்து பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அப்பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான போகோ ஹராம் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் இக்கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்து விடும் என நினைத்து பயங்கரவாதிகள் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலரது கண்களை…

Read More