கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம்: புதிய தொழில்நுட்ப தயாரிப்பு

New ‘Screen X’ technology offers 3D effect without special glasses மூன்று பரிமாணத்துடன் உள்ள ‘3டி’ திரைபடங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளோடு தயாரிக்கப்பட்டு வெள்ளிதிரைக்கு வருகிறது. இந்த ‘3டி’ திரைப்படங்களை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே காண முடியும். கண்ணாடி அணியாமல் பார்த்தால் அதற்குண்டான ஸ்பெஷல் எபெக்ட் இருக்காது. அனால் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மூலம் தற்போது, அதை விஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைபடத்தை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக கண்டு ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர். இந்த திரைபடத்தை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். இந்த திரைபடம் ‘ஸ்கிரீன்…

Read More

ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியிலிருந்து விண்கல் எடுக்கப்பட்டுள்ளது

Huge Half-Ton Chunk of Russian Meteorite Lifted From Lakebed விண்ணிலிருந்து விழுந்த மிகப்பெரிய விண்கல்லின் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியில் இருந்து கண்டெடுத்து மீட்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் விண்ணிலிருந்து விழுந்த 11,000 டன் எடை உள்ள பெரிய விண்கல் ஒன்று செல்யாபின்ஸ்க் எனும் நகரத்தின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் சிதறடிக்கபட்டது. இந்த விண்கல் வ்ழுந்ததால் அங்குள்ள சுமார் 1600 பேர் பாதிக்கப்பட்டனர். சிதறி விழுந்த விண்கல்லின் துண்டுகள் செல்யாபின்ஸ்க் நகர் மற்றும் அங்கு அருகில் இருக்கும் செபர்குல் ஏரியிலும் விழுந்தது. கடந்த ஏழு மாதங்களாக, ஆங்காங்கே சிதறிக்கிடந்த விண்கல் துண்டுகளை தேடும் பணி நடந்து வருகின்றன. நீர் மூழ்கி வீரர் உதவியுடன் நவீன கருவிகளை கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில்,  ஒரு விண்கல் துண்டு செபர்குல்…

Read More

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 1000 வீடுகள் எரிந்து நாசம் ஒருவர் சாவு

The Worst Australian Forest fire : Major Bushfires hit Australia’S Most Populous State ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஒன்று உருவாகி மிக வேகமாக பரவி சுமார் 1000 வீடுகளுக்கு எரித்து சாம்பலாக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் சுமார் 15 இடங்களில் பயங்கரமான கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ பற்றி பரவியுள்ளது. வீசும் காற்றினுடைய வேகம் மிக அதிகமாக உள்ளதால் தீ மளமளவென வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிகின்றது. இதனால் காட்டுப்பகுதி அருகில் மற்றும் அதை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன் டெய்ன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான புகைமூட்டமாக உள்ளது.   2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இந்த காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை…

Read More

ராஜஸ்தானில் மனைவியை சந்தேகப்பட்டு கோடாரியால் வெட்டி கொலை

Monster Husband Butchers Wife to Death Using axe ராஜஸ்தானில் தனது  மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவன் ஒருவன், அவனது 6 வயது மகன் கண் முன்னே தனது மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று விட்டான். கொலை செய்த பின் தனக்கு எதுவுமே தெரியாதது போல தூங்கச் சென்றுவிட்டான். இந்த கொலை  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார்மல் என்ற நபர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர். இவரது மனைவியின் பெயர் திருமதி.கோத்தி. சர்தார்மல், தனது மனைவி திருமதி.கோத்திக்கு வேறொரு ஆள் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருப்பதாக சந்தேகித்து வந்தார். இதனால் மனைவி கோத்தியிடம், சர்தார்மல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில், இவர்களது தகராறு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த தகராறில் சர்தார்மல் தனது மனைவி…

Read More

முதல் முறையாக அமெரிக்க துணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்

Us Senate Confirms Nisha Desai as Assistant Secretary of State இந்திய வம்சாவளியை சேர்ந்த திருமதி.நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்மணியை, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவினுடைய துணை மந்திரி பதவிக்கு, கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ஒபாமா பரிந்துரைத்தார். பின்னர் செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் இதுதொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிஷாவின் திறமையைப் பாராட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இதனையடுத்து திருமதி.நிஷாவை தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் கொடுத்தது. அவர் முறைப்படி விரைவில் பதவியேற்க உள்ளார். தற்சமயம் ராபர்ட் பிளேக் இந்த பதவியை வகித்து வருகிறார். முதல் முறையாக இந்தப் பதவிக்கு, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைப் பூர்வீகமாகக்…

Read More

நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நடிகர் அஜீத்குமார், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து சென்னைக்கு 1,100 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். 16 மணி நேரத்தில் அவர் சென்னை வந்து சேர்ந்தார். நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் நவீன மோட்டார் சைக்கிள் நடிகர் அஜீத் திரைப்படத்துறைக்கு வரும் முன்பு சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தார். திரைப்பட கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமான பிறகு சர்வதேச அளவிலான பல கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார். போக்குவரத்து விழிப்புணர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, அவர் ஹெல்மட் அணிந்தபடி சமீபகாலமாக, நீண்ட தூரம் மோட்டார் சைக்கிள்…

Read More

லாவொஸ் நாட்டு விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 49 பயணிகள் பலி

Bodies Recovered in Mekong After Laos Plane Crash லாவொஸ் நாட்டு விமானம் ஒன்று மோசமான வானிலை நிலவரத்தால் ஆறு ஒன்றில் விழுந்து, 11 நாட்டு பயணிகள் 49 பேர் பரிதாபமாகப் செத்தனர். லாவொஸ் தென்கிழக்கு ஆசியவில் உள்ள ஒரு நாடு. அங்கு உள்ள லாவோ விமான நிறுவன விமானம் ஒன்று நாட்டினுடைய தெற்கு பகுதியில் இருக்கும் நகரம் ஒன்றிற்கு தலைநகர் வியன்டியானேவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. லாவோசில் இருக்கும் மேகாங் எனும் ஆற்றின் கீழ் பறந்து சென்ற போது, விமானத்தில் உண்டான இயந்திர பழுதினால், திடீரென ஆற்றின் நடுவே விழுந்து நொறுங்கி மூழ்கியது. தகவல் அறிந்த உடன் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியை ஆரம்பித்து பலியான உடல்கள் மற்றும் பொருட்களை மீட்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read More

உலகத்தில் 3 கோடி மக்கள் கொத்தடிமைகள்: அதிர்ச்சி செய்தி

30 million people are slaves worldwide, half in India: Survey   உலகத்தில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதில் பெரும்பகுதியானோர் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள் என கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்திருக்கிறது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 29.8 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் கொத்தடிமைகளாக உள்ளது தெரிய வந்திருக்கிறது. இப்போது நாடுகள் வாரியாக கொத்தடிமைத்தனம் அதிகம் எங்கு உள்ளது என்பதை காண்போம். உலக அளவில் கொத்தடிமைகளாக இருப்போர்: 29.8 மில்லியன் பேர் இந்தியா : 14 மில்லியன் கொத்தடிமைகள். சீனா: 3 மில்லியன் கொத்தடிமைகள். மேலும் உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, நைஜீரியா, ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர், எதியோபியா, காங்கோ, தாய்லாந்து, மற்றும்…

Read More

இந்தியாவில் விவசாய பணிகளில் 80% பெண் விவசாயிகள்

Women do 80% of farm work, own only 13% land: Oxfam இந்திய விவசாய பணிகளில் 80% பெண்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் இந்தியாவில் சுமார் 17 கோடி பெண்கள் விவசாயம் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 60 முதல் 80 % வரை தானிய உற்பத்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் அவர்களுடைய பங்களிப்பு இருக்கிறது. அதே போல், பால் மற்றும் பால் சம்பந்த பட்ட   பொருள்களின் உற்பத்தியில் 90% பங்களிப்பும் இருக்கிறது. எனினும்,  13% பெண்களே நிலத்தின் உரிமையாளர்களாகவும் இருகிறார்கள் என ஆக்ஸ்பேர்ம் இந்தியா தெரிவித்திருக்கிறது. நேற்று உலக உணவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு சாராத தொண்டு நிறுவனம் ‘ஆக்ஸ்பேர்ம் இந்தியா’ வெளியிட்டுள்ள  செய்தி ஒன்றில் மேற்கூறிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், பயிர் சாகுபடி பருவ காலத்தில் சுமார்…

Read More

அக்டோபர் மாதம் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாள்

Today is International Day for the Eradication of Poverty வேகமாக வளரும் வறட்சி, நிலையில்லாத அரசியல், உணவு பொருட்களுடைய விலை எற்றம், மற்றும் பொருளாதார மந்தம் ஆகியவற்றினால் பசி பட்டினியினால் வாடுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிகொண்டே போகிறது. உணவுப் பொருட்களுடைய விலை ஏற்றம் காரணமாக, உலக அளவிலும், பட்டினி கொடுமையால் அவதிபடுவோர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டு 80 கோடி பேராக இருந்தது. இந்த எண்ணிக்கை 2005-ம் ஆண்டு 85 கோடியாக ஆனது. அது தற்சமயம் 100 கோடி எண்ணிக்கையாக ஆகியிருக்கிறது. பசி பட்டினியால் வாடுபவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் 1,800 கலோரிகளை விட குறைவான உணவு உட்கொள்கிறார்கள் என்று பொருள். இந்த நிலையில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வறுமையினால் ஒரு நபர் பாதிப்படைந்தால் அந்த நபரின் மனித உரிமை அங்கு…

Read More