12 year old Indian boy beaten to death for cookie theft பீகாரில் பிஸ்கட் திருடிய குற்றத்திற்காக பஞ்சாயத்தில் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரிலுள்ள தாடி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பிஸ்கட், சிறிதளவு பணம் மற்றும் புகையிலை திருடியதாக சிறுவர்கள் இருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊர் பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அஜய் யாதவ் என்பவர் அளித்த புகாரின் பேரில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புகொண்டனர். அதன் பேரில் பஞ்சாயத்து அவர்களுக்கு தண்டனை அளித்தது. செய்த தவறுக்கு தண்டனையாக அவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், பஞ்ஜாயத்தார் முந்நிலையில் தலைகீழாக கட்டி அடிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். அபராதத்தைக் கட்ட பெற்றோர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டனர்…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 2012டில் தொழில்துறையில் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது
Gujarat among industrial growth laggards in FY12 2011-12ஆம் ஆண்டில் கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் தொழில்துறை அபரிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திரிபுரா, ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் தொழில்துறை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-10ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 44.8% தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் 2011-12ஆம் ஆண்டிலோ இந்த வளர்ச்சி குறைந்துபோயிருக்கிறது. 2010-11-ல் 1.25% ஆக இருந்த வளர்ச்சி 2011-12ல் 0.99 ஆக குறைந்து போயிருக்கிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலோ 129.92 மற்றும் 101.47% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதேபோல் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் 93.82%, 55.72% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலோ 37.42, 13.12% தொழில்வளர்ச்சி குறைந்து காணப்பட்டிருக்கிறது. Gujarat among industrial growth laggards in FY12 A set of government data released recently seems…
Read Moreஎமிரேட்ஸ் விமானத்திற்குள் புகைப்பிடிக்க முயன்றவரை இருக்கையில் கட்டிப்போட்ட சிப்பந்திகள்
Man tied up after trying to smoke on Brisbane-bound flight சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார். அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாதியாஸ்…
Read Moreசைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனை
A cycle shop owner’s daughter from Nellai has excelled in English skill test and now going to London for higher studies. சாதாரண, கிராமத்து சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சியை சேர்ந்தவர் முப்பிடாதி. அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் சுப்புலட்சுமி, நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிக்கிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த…
Read Moreஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு
Now, Pay More For ATM Transactions ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை…
Read Moreசார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்
Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜீல் குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளில் ஒன்றான சார்ஜா சென்றிருந்தார். இவர் பயணம் செய்த விமானம் சார்ஜாவில் இறங்கியது. அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரி ஒருவர் பரிசோதித்து விட்டு அதன் மீது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குத்தினார். ஆனால், அதை திருப்பி தராமல் அதில் இருந்த சுஜீல் குமாரின் போட்டோவை பார்த்து விட்டு சர்ச்சையில் ஈடுபட்டார். அதாவது நேரில் இவர் வைத்திருந்த மீசைக்கும், போட்டோவில் முகத்தில் இருந்த மீசைக்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, முகத்தில் இருக்கும் மீசையை அகற்றி விட்டு வந்து காட்டினால் தான் பாஸ்போர்ட்டை தரமுடியும் என ‘கெடுபிடி’ செய்தார். அதற்கு சுஜீல்குமார் விளக்கம் அளித்தார். ஆனால் இவர் சொன்னதை…
Read Moreசத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை
Child sacrifice suspected after missing boy’s body found சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான். மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான…
Read Moreகுஜராத் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ் வழங்கப்பட்டுள்ளது
Govt school beats hazards of heavy schoolbags with tablets தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கான பாடங்களை 3 பருவமாக பிரித்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அத்துடன் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறையில் மாணவர்களின் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.எனினும் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் இப்போதும் கவலை அடையச் செய்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் (டேப்லட்ஸ்) வழங்கப்பட்டுள்ளது. அதாவது அதிக பாடப்புத்தகங்கள் கொண்ட பைகளை சுமந்து செல்வதற்கு பதிலாக இந்த கையடக்க கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ‘சங்கன்வா’ என்ற பள்ளியில் 5–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு…
Read Moreஇயற்கை வேளாண்மை விஞ்ஞானி கொ.நம்மாழ்வார் இயற்கை எய்தினார்
Organic farming scientist Nammalvar passes away முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார். ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாதிரிப் பண்ணை ‘இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்’…
Read Moreகடலில் குளிக்கச் சென்ற மக்களை பிரானா மீன் கொடூரமக கடித்ததில் 60 பேர் படுகாயம்டைந்துள்ளனர்
60 hurt in Argentina piranha attack அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ரோசாரியோ நகரைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த கடலில் இறங்கி ஆனந்தக் குளியலிட்டுள்ளனர். அப்போது, அங்குக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் கடலுக்கு உள்ளே இருந்து பிரானா எனப்படும் மனிதர்களைக் கடிக்கும் மீன்கள் வெளிவந்து தாக்கியுள்ளன. என்ன நடக்கிறது என அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், குழந்தைகள் உட்பட அப்பகுதியில் குளித்தவர்களின் உடலைக் கடிக்கத் துவங்கியுள்ளன பிரானாக்கள். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அம்மக்கள் அலறித்துடித்து கடலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் சிக்கி சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் பல குழந்தைகள் தங்கள் விரல்களை முழுவதுமாக பறி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 hurt in Argentina piranha attack Buenos Aires: Piranhas on…
Read More