மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?

  Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…

Read More

இந்தியாவில் அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

Ambassador Production Stopped as Power Shifts in Delhi சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய மோரிஸ் ஆக்ஸ்போர்டு காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது. பின், அம்பாசிடர் கார், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, அதிகார வர்க்கத்தினர் பயணிக்கும், அதிகாரப்பூர்வ காராகவும் மாறியது. இந்துஸ்தான்…

Read More

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது..

Indian rupee opens higher at 60.59 per dollar இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.59-ஆக ஆனது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து பிறநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.60.64-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. Indian rupee opens higher at 60.59 per dollar The Indian rupee opened with marginal gains of 5 paise at Rs.60.59 per dollar on Tuesday as against previous day’s closing value of Rs.60.64 a dollar. Ashutosh Raina of HDFC Bank said that, “The…

Read More

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்: முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

2G spectrum allocation case : Delhi court on Monday fixed May 5 for commencement of recording of statements of former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi and 15 others facing trial : 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ராசாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டனர். 2G spectrum allocation case A Delhi court on Monday…

Read More

சீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டது

The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese  News Agency reported on Wednesday. பீஜிங்: அமெரிக்க தனியார் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவில் உள்ள சோங்கிங் எனும் நகரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese  News Agency reported on Wednesday.

Read More

அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…

Read More

பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வு

The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50% மும்பை : ரெப்போ எனும் வங்கிகளுடைய குறைந்த கால வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் 0.25 % உயர்த்தியிருக்கிறது. அதே வேளையில் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீத அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம்ராஜன் கூறினார். இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய ரிசர்வ் வங்கியினுடைய மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டு பேசுகையில், ரெப்போ வட்டி விகிதம் 7.50 சதவிகிதத்தில்  இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் எம்.எஸ்.எப். வட்டி 9 சதவிகிதத்தில் இருந்து 8.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். சி.ஆர்.ஆர். எனும்…

Read More

வால்மார்ட் – பாரதி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வர்த்தகம்

wal-mart entered to retail business in india with the partnership of  Bharti Enterprises Ltdஉலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையில் இருக்கும் வால்மார்ட் , தற்போது பாரதி நிறுவனத்துடன் சேர்ந்து சில்லரை வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த உள்நாட்டு நிறுவனத்துடனும் கூட்டு சேராமல் தனியாக சில்லரை வர்த்தகத்தில் ஈடு படலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் இவ்வனுமதியை பெறுவதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக, அமெரிக்க செனட் சபைக்கு வால்மார்ட் நிறுவனம் அளித்த காலாண்டு அறிக்கையில் கூறியிருந்தது. இந்த செய்தி இந்தியாவில் மாபெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. விரைவில் விசாரணைக்குழுவின் அறிக்கையை…

Read More

ஹாங்காங்கில் மிகப்பெரிய வைரக்கல் ஏலம்

World Biggest Diamond to be Auctioned in Hong Kong! ஆப்பிரிக்க நாட்டில் ஒரு புகழ்பெற்ற வைரச்சுரங்கத்தில் 2011ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய அளவு வைரக்கல் கிடைத்தது.  இதன் எடை மட்டுமே 299 காரட். வெள்ளை நிறத்தில் உள்ளதை கொள்ளை கொள்ளும் வகையில் பட்டைத் தீட்டப்பட்டு 118.28 காரட்டாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய வைரக்கல் ஹாங்காங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற 2013 அக்டோபர் மாததில் ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஏலத்தில், அந்த வைரக்கல் சுமார் ரூ.200 கோடியில் இருந்து ரூ.238 கோடிவரை ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 101.73 காரட் எடை கொண்ட வைரம் கடந்த ஆண்டு 180 கோடிக்கு ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அந்த ஏலம் தான் அதிக அளவில் போய் சாதனை புரிந்தது. எனினும் தற்போது உள்ள இந்த…

Read More

நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Microsoft buys Nokia உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Microsoft and Nokia today announced that the “Boards of Directors for both companies have decided to enter…

Read More