உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த…

Read More

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர் ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர். புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர்  பயத்தில் உள்ள…

Read More

பிரதமருக்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்..

jayalalitha letter to manmohan singh சென்னை, ஜூன் 9: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ மான இந்த விஷயத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேரடி கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு: தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான, மிக முக்கியமான பிரச்சனை யில் உங்கள் கவனத்தை உடனடி யாக ஈர்க்க விரும்புகிறேன்.  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு செய்து வரும் கொடுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடையே ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இதனை பொருட்படுத்தாமல் இலங்கையின் 2 ராணுவ அதிகாரிகளை பயிற்சிக் காக அழைத்து இருக்கிறது.…

Read More

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறப்பு

Tamilnadu school reopens on 10th June 2013 கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-க்குப் பதில் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி…

Read More

நான்கு வகையான அம்புலேன்ஸ்: மத்திய அரசு திட்டம்

அரசியல் மாற்றங்களும் அறிவியல் முன்னேற்றங்களும் நிகழும் இந்த நிலையிலும் இன்றும் இந்தியாவில் அவசரத்திற்கு உதவ செல்லம்  அம்புலென்ஸ்கு வழி இல்லை குறுகிய சாலைகள்   ஆம்புலென்ஸ் செல்ல முடியாத குறுகிய வழிகள் அம்புலேன்சுடன் போட்டி போட்டு  செல்லும் வாகனங்கள் என பல பிரச்சனைகள் மத்தியில் முதலுதவி பெற முடியாமல் பலரும் தவிக்கின்றனர் ஒரு சிலர் இறக்கின்றனர், அத்துடன் பெரும்பாலான நகரங்களில் சாலை வசதியே மிக குறுகலாக உள்ளது. இதனைப் குறைக்கும் வகையில், மத்திய அரசு விரைவில் நான்கு விதமான ஆம்புலன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வரையில் தேவையான முதலுதவி சாதனங்களுடனும், திறமையான ஊழியர்களுடனும் இந்த வாகனங்கள் செயல்படுத்தப்படும். இவற்றில் முதல் பணியாளர் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் போன்ற நாடுகளில் இதுபோன்ற வாகன சேவைகள் மக்களுக்கு கிடைக்கின்றன. இரு சக்கர வாகனங்களில்…

Read More

தென்காசி அருகே நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். திரும்பவும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி ஆர்.டி.ஓ. ரமேஷ், வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அதே பகுதியில் கடந்த…

Read More

மீன் குழந்தைகளுக்கு தோல் நோய் வரது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

fish is healthy food, its cure skin disease for 1year child ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத்…

Read More

முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமர் ஆக நாஞ்சில் சம்பத் விருப்பம்

next prime minister J.Jayalalitha to save india : Nanjil Sampath Speech தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வெற்றிபெற்று  இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், பென்னிகுயிக்கிற்கு நினைவகம் அமைத்து உலக அளவில் ஜெயலலிதா இன்று போற்றப்படுகிறார். மதிமுகவுக்காக 18 ஆண்டுகள் உழைத்தேன், அன்று பலனில்லை. கடந்த செப்டம்பர் முதல் நான் ஒரு முழு அரசியல்வாதியாக, அதிமுகவின் கடைசி தொண்டனாக தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்டேன். சாதனைகள் படைக்கும் தமிழக முதல்வர் வழியில் செல்வோம். ஜாதியை தூண்டி விட்டு அரசியலாக்க முயன்றவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ். அதை முறியடித்தவர் தமிழக முதல்வர். கருணாநிதி…

Read More

தாய் பால் குடித்து வளரும் குழந்தைகள் 30% மூளை வளர்ச்சி : மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்

Breast milk boosts brain development in babies by up to 30 per cent 7 June 2013 : அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில், மூளையில் உள்ள வெள்ளை அணுக்கள் வளர்ச்சி தாய்பாலில் மட்டுமே உள்ளது எனவும், ஏனைய புட்டி பாலில், அது மிக குறைந்த அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நல்ல அறிவு வளர்ச்சி உள்ள குழந்தைகள் வேண்டும் என்றால் கட்டாயம் தாய் பால் கொடுத்தே வளர்க்கவேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது. மொழி மற்றும் உணர்ச்சி சம்பத்தப்பட்ட மூளை வளர்ச்சி அதிகம் இருப்பதாகவும், புத்திசாலிதனம் அதிகம் உள்ள குழந்தை வேண்டும் என்றால் கட்டாயம் 3 மாதம் தாய்பால் கொடுத்தாகவேண்டும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  Breast milk boosts brain development in babies by up to 30 per cent Breast milk boosts brain…

Read More

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்: இந்திய ராணுவ அதிகாரி பலி

Pakistani troops opened persistent fire at a forward Indian post in Jammu & Kashmir and killed a junior commissioned officer (JCO). 08 June 2013: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மாண்டி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இளநிலை ராணுவ அதிகாரி (ஜே.சி.ஓ.) ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச் மாவட்டம் மாண்டியை அடுத்த சாஜியான் பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது, லோனவாலி சாவடி மீது ஒரு ராக்கெட் தாக்கியது. அப்போது, அதிலிருந்து சிதறிய ஒரு பாகம், கர்வால் படைப்பிரிவைச் சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி…

Read More