thalaiva film is a commercial movie only its not touch politics. actor vijay தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். ‘தலைவா’ படம் 9-தேதி தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத…
Read Moreசேரன் மகள் தாமினி விவகாரத்தில் அமிரின் அதிரடி தகவல்
சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சந்துரு குடும்பம் தொடர்பாக திடுக்கிடும் ஆதாரங்களை காட்டியுள்ளார். சேரனின் நண்பரும் இயக்குனருமான அமீர் ஆரம்பித்திலிருந்தே தாமினி காதல் விவகாரத்தில் சேரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார். இதனால் கோபமடைந்த சந்துருவின் சகோதரி கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிடுவதற்கு நீ யார் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அமீர் சேரனின் மகளும் என்னுடைய மகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் சந்துருவின் குடும்பமானது முழுக்க முழுக்க பணம் பறிக்கும் கும்பல். சந்துருவின் அக்கா பத்மா ராமநாதபுரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகியிருந்த இலியாஸ் என்பவரோடு ரகசியமாக குடும்பம் நடத்தி அவரை ஏமாற்றி அவரிடமிருந்து 200 பவுனுக்கும் அதிகமான நகை, ஆந்திராவில் வீடு, லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். இதற்காக அவர்களது மொத்தக் குடும்படும் முஸ்லிமாக மாறியுள்ளது, மேலும் சந்துரு மானாமதுரையில் ஒரு வசதியான வீட்டுப்…
Read Moreஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில் . கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நடந்துவரும் இப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் வரும் 12ம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திரா பகுதி காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர். அப்போது சோனியா காந்தி கூறுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே அந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரசார் தெலுங்கானா அமைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்த பகுதி மக்களுக்கும் அநீதி ஏற்படுத்த வேண்டும் என் பதற்காக நாங்கள் இங்கு இருக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாருக்கும் நீதி…
Read More2ஜி ஊழல் நீரா ராடியா "டேப்" : சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
why investigating agencies did not take action for four years regarding Radia tape contents in 2g புதுதில்லி 08-ஆகஸ்ட்-2013: நீரா ராடியா உரையாடல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டு, மத்திய அரசு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தன் சாட்சிகள் பட்டியலில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் பெயரை குறிப்பிட்டு இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், மீடியா ஆலோசகராகவும், அரசியல் தரகராகவும் செயல்பட்டார். இவர், ஒன்பது ஆண்டுகளில், 300 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் அடிப்படையில், இவர் மீதான விசாரணைக்கு, நிதி அமைச்சகம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், வருமான வரித் துறையினர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.…
Read Moreஅஜித்தின் 'ஆரம்பம்' இணைய தளங்களில் வெளியாகியதால் அதிர்ச்சி!
actor ajith new film arambam movie scene Aarambam Video Leaked அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்பதினால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், என்னுடைய படக்குழு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இது…
Read Moreஒரே மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட ஒரு வழி
diabetes quits in one month சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட…
Read Moreஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
rupee all time low of 61.80 against USD பெட்ரோல், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரிப்பாலும் இறக்குமதியாளர்களின் டாலர் தேவையாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்று வர்த்தக முடிவில் டாலர் ஒன்றிற்கு ரூபாய் 60.88 ஆக இருந்தது. இன்று துவங்கியவுடன் 61.05 ஆக அதிகரித்தது. பின்னர் 61.51 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூலை 8ஆம் தேதி 61.21 ஆக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலே தவிர இறக்குமதிகளை குறைக்க வழியில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். English Summary: rupee all time low of 61.80 against USD After plunging to a record intra-day low of 61.80, the rupee rebounded sharply to…
Read Moreநோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை
Nobel prize winner for peace, Tawakkul Karman Denied Entry Into Egypt ஏமனை சேர்ந்த தவக்கோல் கம்ரான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முர்சிக்கு அவரது ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தவக்கோல் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க நேற்று எகிப்து வந்தார். தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. உடனே அவர் மற்றொரு விமானம் மூலம் ஏமனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு முர்சியின்…
Read Moreசேரனின் மகள் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நீதிமன்றம் உத்தரவு
Tamil Cinema director cheran daughter news இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியர் பாதுகாப்பில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரன் மகள் தாமினி காதல் பிரச்சனையால் வீட்டிலிருந்து வெளியேறி தன் காதலன் சந்துருவுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் தான் சந்துரு என்ற இளைஞரை காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் சந்துரு நல்லவர் இல்லை என்றும் தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என இந்த குற்றச்சாட்டினை சேரன் மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் தங்க வைத்தனர். இந்நிலையில்…
Read Moreடெல்லி பல்கலைகழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட அவலம்
Women raped in Delhi university டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார். இந்நிலையில் இவரை சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திடீரென்று அப்பெண்ணை அடித்து தகாத முறையில் நடந்துக்கொண்டார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார் .மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள் முன்னாள் மாணவரை அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது. மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். Women raped…
Read More



