BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case. பிரதமர் மன்மோகன் சிங் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று முன்னாள் நிலக்கரித் துறைசெயலர் பி.சி.பரேக் கூறியிருக்கிறார். சி.பி.ஐ தன் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் தான் வெளிப்படையான அணுகுமுறையை இந்த சுரங்க ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தார். பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி இந்நிலையில் பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் திருட்டு
glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar சென்னையில் நேற்று மாலை கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருக்கிறது. ரியாஸ்அகமது (வயது 32) என்பவர் பாலவாக்கம் பல்கலைநகரைச் சேர்ந்தவர். இவர் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் ஆடை வாங்குவதற்கு நேற்று மாலை (செவ்வாய்கிழமை) சென்றார். காரில் சென்றிருந்த அவர், கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். உடுப்புகள் வாங்கிய பின் காரை எடுப்பதற்கு வந்த ரியாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது காரின் கண்ணாடி உடைக்கபட்டிருந்தது. அதில் வைக்கபட்டிருந்த 4 லட்ச ரூபாயும், தனது லேப்டாப்பும் காணமல் போயிருந்தது. இது பற்றி ரியாஸ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்…
Read Moreம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்
Married woman and lover thrashed, stripped naked in a MP Village மத்தியப்பிரதேசத்தில் காதல் திருமண ஜோடியை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த கிராம மக்கள் ஒரு காதல் திருமண ஜோடியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து இதுவரை காவல்துறையினர் அந்த ஊரில் உள்ள எவரையும் கைது செய்யவில்லை மேலும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் துவங்கபடவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காதலர்களின் உடுப்புகளை கிழித்து எரிந்து அவர்களுடைய உடலில் கறுப்பு வண்ண பெயிண்ட் அடித்து பெரும்பான்மையான ஊர்மக்கள் திரண்டு வந்து அவர்களை அடித்து உதைத்த வண்ணம் மூன்று…
Read Moreபெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..
Fear-sensing device to aid distressed women உலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியாக பெண்கள் போகும் போதோ அல்லது வேலையிடங்களில் ஏதேனும் தொல்லைகள் காரணமாக அவர்களுக்கு பயம் இருந்தால் அதனை பதிவு செய்துகொள்ளும் ஒரு கருவியை தெற்கு தில்லியில் உள்ள திரு.யாஷ்பாட்டியா என்ற வல்லுநர் கண்டுபிடித்திருக்கிறார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்று பயிற்சி பெற்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி புளூடூத் தொழில் நிட்பம் கொண்டதாகும். சுமார், 7 கிராம் எடையுடன் சதுர வடிவினில் இருக்கும் இந்த சாதனம் ரீச்சார்ஜ் செய்த கொள்ள கூடிய பேட்டரிகள் களை கொண்டதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கருவி இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்றவைகளை கண்டு கணக்கிட உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல்…
Read Moreதகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்
India’s RTI Act second best in the world வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமாக ஓர் ஆய்வு நடத்தது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 95 நாடுகளில் நடந்த இந்த ஆய்வினில் இந்தியா 2வது இடத்திலும் செர்பியா முதலாவது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையோடு தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உருவாக்க பட்ட சட்டம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’. இந்தியாவில் இந்த சட்டம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டு மே 11ம் தேதி மக்களவையிலும், 2005ஆம் ஆண்டு மே 12,ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு, ஜூன் 15 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 2005-ம் ஆண்டு,…
Read Moreசிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு
Missing Singapore model found dead in Pakistan சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார். ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி.…
Read Moreமூத்த பத்திரிகையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: தலைவர்கள் இரங்கல்
Senior Journalist Mr Ramachandra adhithan died today in residence at chennai Adyar. His age is 80 years மாலைமுரசு நிர்வாக ஆசிரியரம் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். பா ராமச்சந்திர ஆதித்தனுக்கு வயது 80. தமிழர்களின் தந்தை என்று அழைக்க பட்டவரும் பிரபல பத்திரிக்கையான தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் திரு.பா ராமச்சந்திர ஆதித்தனாகும். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி எனும் ஊரில் பிறந்தவர். தனது தந்தை ஆதித்தனாரின் வழியை பின் பற்றி பத்திரிகைத் துறையினில் ஐக்கியமான இவர் மாலை முரசு என்ற மாலை நேர பத்திரிக்கையை ஆரம்பித்து அதற்கு உரிமையாளர் ஆனார். மேலும், பிறகு அவர் தேவி எனும் வார இதழ்…
Read Moreபிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி
Deadly earth quake hits Philippine in Bohol and Cebu மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர். இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே…
Read More9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை
9-year-old raped in Chennai சென்னையில் 9 வயது நிரம்பிய சிறுமியை 32 வயதுடைய கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். சென்னையிலுள்ள மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி திருமதி.ரோஜா பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமதி.ரோஜா தனது தாய் சகுந்தலாவை பழக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.ரோஜாவின் 9 வயது மகள் பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியுடன் கடைக்கு போனார். மதியம் சுமார் 3 மணி அளவில் அவர்களது கடைக்கு வந்த சுரேஷ் என்ற லோடு ஆட்டோ ஓட்டுனர் சிறுமியிடம் பேசியுள்ளார். தான் அவளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி அவருடன் போகட்டுமா என பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பாட்டி பழ வியாபாரத்தில் ஆர்வமாக…
Read Moreபள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
school girl immolated herself in Kanchipuram காஞ்சிபுரதை அடுத்து உள்ள திருவண்ணாமலை மாவட்டம் தூசி எனும் ஊருக்கு அருகில் அப்துல்லாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த நபர் கன்னியப்பன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு தேன்மொழி மனைவியும், இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிப்பு படிக்கும் ஒரு மகளும், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் சினேகா (வயது 11) என்ற மகளும் உள்ளார்கள். கன்னியப்பன் தனது ஆட்டோவில் தினமும் தனது மகள் சினேகாவை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு சென்று, மாலை வேலையில் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் போவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று எப்போதும் போல், பள்ளிகூடத்திற்கு வந்த மாணவி சினேகா, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குள் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி…
Read More