Huge Asteroid Will hit Earth in 2032 Claim Astronomers வருகிற 2032 ஆம் ஆண்டு பூமியை ராட்ஷச விண்கல் ஒன்று தாக்கும் என்றும், இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். விண்வெளியில் ஆங்கங்கே மிதக்கும் சில விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்கின்றன. இது போன்ற பெரும்பாலான விண்கற்கள் பூமியை நெருங்கும் முன்பே வெடித்துவிடும். மேலும் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஒரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
நியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்
Girls stopped for shoplifting in NY had human fetus in bag ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபல மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு உள்ளாடைக் கடை. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது என்பதால் ஜோப்படி திருடர்களை கண்காணிக்க தனி காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். சுமார் 17 வயதுடைய இரண்டு இளம் மங்கையர்கள் நேற்று மதியம் இந்தக் கடையில் துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அருகில் செல்லும் போது தூர்நாற்றம் வருவதை கண்ட காவலர்கள், சந்தேகமடைந்து அவர்களது கைப்பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணினுடைய பையில் ஒரு பச்சிளம் சிசு இறந்து அமுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர்கள் காவல்துறையினரை அழைத்தார்கள். சிசுவை அந்த பெண்களில் ஒருவர், ஒரு நாளைக்கு முன் பிரசவித்ததாகவும், அதை என்ன செய்வது என…
Read Moreசீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை
Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’ நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஐ-போன் மற்றும் ஐ-பேடுகளை வாங்க இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் சீன நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தங்களது கிட்னியைக் கூட விற்று இத சாதனங்களை வாங்குவதாக பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் விஞ்சும் வகையினில், சீனாவில் இருக்கும் இளம் தம்பதியர், ஐ-போன் வாங்க தங்களது பெண் குழந்தையை விற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த தமபதியினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் தகளுடைய மூன்று வயதே ஆன குழந்தையை இன்டர்நெட் விளம்பரம் செய்து ஆன்லைன் மூலமாக விற்றதாகவும், ஐ-போன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற நவீன பொருட்கள் வாங்க அந்த பணத்தை உபயோகப்படுத்தியதாகவும், சீன உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.…
Read Moreநாகர்கோவிலில் 10 மாதங்களாக வீட்டில் சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்
Relatives live with woman’s body in house for 10 months நாகர்கோவிலில் இறந்து போன தங்களது குடும்பத்து பெண்ணினுடைய உடலை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்து கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வாழ்ந்து வருபவர் மறைந்த சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி சரோஜினி(89). இவருக்கு உமாதேவி என்ற மகளும், பெருமாள் பிள்ளை, செல்வம் பிள்ளை என்ற மகன்களும் உண்டு. மகள் உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இந்த தம்பதிக்கு சிவபிரசாத் (வயது 25) என்ற மகன் இருக்கிறார். குடும்ப தகராறில் உமாதேவி தனது கணவர் தாணுப்பிள்ளையை பிரிந்து, மகன் சிவபிரசாத்துடன் நாகர்கோவிலில் இருக்கும் ராமவர்மபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடியேறிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது சகோதரர் பெருமாளும் இறந்து…
Read Moreபாய்லின் புயல் பதிப்பு 1.72 லட்சம் பறவைகள் 4,393 கால்நடைகளும் பலி
4393 animals, 1.7 lakh birds killed in cyclone-flood in Odisha பாய்லின் புயலால் உண்டான ஒடிஷா மாநில வெள்ளத்தில் சிக்கி 4,393 கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் 1.72 லட்சம் பறவைகள் பலியாகியிருக்கிறது. அண்மையில் ஒடிஷா மாநிலத்தை பலம் வாய்ந்த பாய்லின் புயல் தாக்கியது. இந்தப் புயல் கரையை கடந்த போது பலத்த சூறாவளி காற்று மணிக்கு சுமார் 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. பெருமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தின் பாதிப்பு பற்றி நேற்று புவனேஸ்வரில் ஒடிஸா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் மொஹாபாத்ரா பத்திரிக்கை நிருபர்களிடம் உரையாடுகையில், இந்த கடுமையான வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட 4,393 பெரிய விலங்குகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 1,70,970 பறவைகள் பலியாகியுள்ளன. பேரிடர் நிகழ்ந்த போது 31,062 ஆடு,…
Read Moreதனியார் வானொலி செய்தி அனுமதி மறுப்பு ஏன்? உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Supreme Court to examine curbs on news on private FM radio இந்தியாவில் இருக்கும் தனியார் வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒளிபரப்ப அனுமதி கொடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொது நலன் மனுவை ஒன்றை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசாங்கம், தனியார் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் ஒளிபரப்ப கொடுக்க மறுப்பது ஏன் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பி இருக்கிறது. பொது நல மனு ஒன்றை எற்ற தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் அவர்களின் தலைமையில் உள்ள அமர்வு நீதிமன்றம், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், சஞ்சிகைகள் உள்பட்ட மற்ற தனியார் ஊடகங்கள் அனைத்திற்கும் செய்திகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ள போது, பண்பலை வானொலி நிறுவனங்களுக்கும், சமுதாய வானொலி நிறுவனங்களுக்கும் மட்டும்…
Read Moreகண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம்: புதிய தொழில்நுட்ப தயாரிப்பு
New ‘Screen X’ technology offers 3D effect without special glasses மூன்று பரிமாணத்துடன் உள்ள ‘3டி’ திரைபடங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளோடு தயாரிக்கப்பட்டு வெள்ளிதிரைக்கு வருகிறது. இந்த ‘3டி’ திரைப்படங்களை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே காண முடியும். கண்ணாடி அணியாமல் பார்த்தால் அதற்குண்டான ஸ்பெஷல் எபெக்ட் இருக்காது. அனால் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மூலம் தற்போது, அதை விஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைபடத்தை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக கண்டு ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர். இந்த திரைபடத்தை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். இந்த திரைபடம் ‘ஸ்கிரீன்…
Read Moreரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியிலிருந்து விண்கல் எடுக்கப்பட்டுள்ளது
Huge Half-Ton Chunk of Russian Meteorite Lifted From Lakebed விண்ணிலிருந்து விழுந்த மிகப்பெரிய விண்கல்லின் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியில் இருந்து கண்டெடுத்து மீட்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் விண்ணிலிருந்து விழுந்த 11,000 டன் எடை உள்ள பெரிய விண்கல் ஒன்று செல்யாபின்ஸ்க் எனும் நகரத்தின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் சிதறடிக்கபட்டது. இந்த விண்கல் வ்ழுந்ததால் அங்குள்ள சுமார் 1600 பேர் பாதிக்கப்பட்டனர். சிதறி விழுந்த விண்கல்லின் துண்டுகள் செல்யாபின்ஸ்க் நகர் மற்றும் அங்கு அருகில் இருக்கும் செபர்குல் ஏரியிலும் விழுந்தது. கடந்த ஏழு மாதங்களாக, ஆங்காங்கே சிதறிக்கிடந்த விண்கல் துண்டுகளை தேடும் பணி நடந்து வருகின்றன. நீர் மூழ்கி வீரர் உதவியுடன் நவீன கருவிகளை கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ஒரு விண்கல் துண்டு செபர்குல்…
Read Moreஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 1000 வீடுகள் எரிந்து நாசம் ஒருவர் சாவு
The Worst Australian Forest fire : Major Bushfires hit Australia’S Most Populous State ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஒன்று உருவாகி மிக வேகமாக பரவி சுமார் 1000 வீடுகளுக்கு எரித்து சாம்பலாக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் சுமார் 15 இடங்களில் பயங்கரமான கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ பற்றி பரவியுள்ளது. வீசும் காற்றினுடைய வேகம் மிக அதிகமாக உள்ளதால் தீ மளமளவென வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிகின்றது. இதனால் காட்டுப்பகுதி அருகில் மற்றும் அதை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன் டெய்ன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான புகைமூட்டமாக உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இந்த காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை…
Read Moreராஜஸ்தானில் மனைவியை சந்தேகப்பட்டு கோடாரியால் வெட்டி கொலை
Monster Husband Butchers Wife to Death Using axe ராஜஸ்தானில் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவன் ஒருவன், அவனது 6 வயது மகன் கண் முன்னே தனது மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று விட்டான். கொலை செய்த பின் தனக்கு எதுவுமே தெரியாதது போல தூங்கச் சென்றுவிட்டான். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார்மல் என்ற நபர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர். இவரது மனைவியின் பெயர் திருமதி.கோத்தி. சர்தார்மல், தனது மனைவி திருமதி.கோத்திக்கு வேறொரு ஆள் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருப்பதாக சந்தேகித்து வந்தார். இதனால் மனைவி கோத்தியிடம், சர்தார்மல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில், இவர்களது தகராறு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த தகராறில் சர்தார்மல் தனது மனைவி…
Read More