Hong Kong: Son Accused of ‘Killing and Cooking His Parents’ Appears in Court பெற்றோரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோ ஓவனில் சமைத்து டிபன்பாக்ஸில் அடைத்து வைத்த மகன் கைது செய்யப்பட்டான். ஹாங்காங்கை சேர்ந்த தம்பதிகள் சா-வூங்-கி (வயது 65), சியூ-யூட்-ஈ (வயது 62). இவர்களது மகன் ஹென்றி ச்சு (வயது 30). கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தம்பதிகளை காணவில்லை. ஆனால் இதுகுறித்து மகன் அருகில் இருந்தவர்களிடம் தனது பெற்றோர்கள் சீனாவிற்கு சுற்றுபயணம் சென்று இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனது பெற்றோரை கொன்று விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஹென்றி ச்சு பெற்றோர்களின் தலையை தனியாக வெட்டி எடுத்து உப்புடன் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
வங்காளதேசத்தில் 200 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’ வங்காளதேசத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் நீர்வழி போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆபத்து நிறைந்த அந்நாட்டின் ஆற்றுப் பகுதிகளை அன்றாடம் படகுகள் மூலம் கடந்து சென்று தங்களின் பிழைப்பை அவர்கள் நடத்தி வருகின்றனர். ஆறுகளில் திடீரென்று பாய்ந்து வரும் வெள்ளப் பெருக்கும், பெரும் சுழல்களும் இது வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளது. படகுகளின் கொள்ளளவையும் மீறி ஏராளமான மக்களை படகோட்டிகள் ஏற்றிச் செல்வதே விபத்துகளுக்கான மூலக்காரணம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், வங்காளதேச தலைநகர் டாக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் வழியாக பாய்ந்தோடும் பத்மா ஆற்றில் சுமார் 200 பயணிகளுடன் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததாகவும், தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இதுவரை 44 பயணிகளை மீட்டுள்ளதாகவும் டாக்காவில் இருந்து…
Read Moreபுனேயில் நிலச்சரிவில் 75 பேர் பலி 100க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
Pune landslide toll climbs to 75, 100 more people feared buried புனேவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 75 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. இந்நிலைரயில் 75 பேரின் உடல்கள் மீம்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து…
Read Moreகறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Antibiotics in chicken are making humans drug resistant: study கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. தேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல்…
Read Moreகாஸாவில் இறந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை…!
Gaza doctors save baby from her dead mother’s womb காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கி பலியான 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் அந்த குழந்தை பிறக்கும் முன்பே தாயை இழந்த பரிதாபம் நடந்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய காஸாவில் உள்ள தேர் அல் பலாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு தரை மட்டமானதில் அதில் வசித்து வந்த ஷைமா அல் ஷேக் கனான்(23) என்ற 8 மாத கர்ப்பிணி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது உடல் தேர் அல் பலாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை…
Read More8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்
Heart passed 14 Km distance within 8 minutes வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது. மூளைச்சாவு நிலை: எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.…
Read Moreபிஹாரில் நெடுஞ்சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வர்கல் மீது லாரி ஏறியதில் 12 பேர் பலி
Tanker collides with bus carrying pilgrims in Bihar, 12 dead பீகாரில் தேசிய நெடுஞ்சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியானார்கள். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் ஜோஷி என்பவர் ஆண்டுதோறும் இம்மாதம் பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தனி பேருந்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆன்மீக சுற்றுலா திருப்திகரமாக முடிந்த நிலையில், இன்று அதிகாலையில் அவுரங்காபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முப்பா சில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டெல்லி – கொல்கத்தா தேசிய…
Read Moreமத்திய அரசு ஊழியர்கள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
Central Government employees are ordered to submit New Property List ‘அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், புதிய சொத்து விவர பட்டியலை,செப்டம்பர், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம். அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: லோக்பால் சட்டத்தின்படி, தங்களின் சொத்துகளும்கடன்களும்குறித்த விவரங்களை, அனைத்துமத்திய அரசு ஊழியர்களும்சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், தங்களது அசையும் சொத்துகள்,அசையா சொத்துகள்,கடன்கள் மற்றும் டிபாசிட்கள் பற்றியவிவரங்களை, ஆகஸ்ட், 1ம் தேதி,2014 நிலவரத்தின்படி, சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே இதனைசமர்ப்பித்தவர்களும், மாற்றி அமைக்கப்பட்ட புதியவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும்மத்திய அரசு ஊழியர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என 50 லட்சம் கணக்கில் உள்ளனர். இந்த சொத்து விவரங்களை,அவர்கள் அனைவரும்சமர்ப்பிக்க வேண்டும். ஆன் – லைன் மூலம், ஐ.ஏ.எஸ்.,…
Read Moreதமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்
Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…
Read Moreஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது
An Android app that turns your phone into a mosquito repellent ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள “Mosquito Repellent” என்ற…
Read More