டெல்லி :கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ,அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை…
Read MoreAuthor: Tamil News Online
ஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
டெல்லி:கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ,வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12% அவரின் சம்பளத்தில் இருந்தும் , 12% நிறுவனத்தின் சார்பில் இருந்தும் சேர்த்து வைக்கப்படும். நிறுவனத்தின் சார்பில் இருந்தும் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பங்களிப்பாக வைப்பு வைக்கப்படும் . 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் , புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஆணையம் 2018-ல் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை…
Read Moreசீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது உயர்நீதிமன்றம் வழக்கு!
சென்னை:சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் நீதிமன்றத்திற்கு போலி அறிக்கை அளித்ததால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.2018ம் ஆண்டு கை ரேகை பிரிவில் எஸ்.ஐ பணிக்காக தேர்வு குறித்த வழக்கு நடைபெற்றது வருகிறது.அந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் போலி அறிக்கைகளை சமர்பித்ததாக கூறப்படுகிறது.அதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read Moreசென்னை உயர்நீதிமன்றம்: இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
சென்னை: அரியலூர் மாவட்டம் செந்துநை அருகே 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக மணிகண்டன் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினால் நீதி கிடைக்கும் என்று இளம்பெண்ணின் தாய் கருதினார்.இதை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி இளம்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read Moreகொடநாடு விவகாரம்: ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறி மு.க.ஸ்டாலின் பேசினார்.இதனால் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது .இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் . ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு,இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என…
Read Moreதிருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.அந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று திருமாவளவன் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து காவல்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்திரவிட்டார் .பிறகு அந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read Moreகுழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அதற்கு உடந்தையாக இருந்த தாய்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் கணவர் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின்…
Read Moreதிருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர்
பெங்களூர்:கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர் திருமண தகவல் அலுவலகம் மூலம் தனது பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்த ரக்ஷா (26) என்ற பெண்ணை திருமணம் பேசி முடித்து, இருவருக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்ஷா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய அழைத்து சென்றுள்ளார்.கணவர் டாக்டரிடம் ரகசியமாக பேசி மனைவிக்கு தெரியாமல் கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளார்.சந்தேகத்திற்கு காரணம் திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் ரக்ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.திருமணம் பிடிக்காததால் தான் ரக்ஷா இப்படி இருப்பதாக சரத் தவராக கருதியுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் ரக்ஷாவின் உறவினர் ஒருவர் ஏராளமான உதவிகளை செய்ததால் அவர்…
Read Moreசரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
டெல்லி: சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது மனைவி பெயர் ஜீவஜோதி. கொடைக்கானல் மலையில் சரவணபவன் ஹோட்டலின் ஊழியர் சாந்தகுமார் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வந்தது.ராஜகோபால் தான் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஹை ஐகோர்ட் ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.இந்த…
Read Moreகோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை :பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது பொது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.பொள்ளாச்சியின்பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்டதால் எஸ்பி மற்றும் உள்துறை செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை…
Read More