கொளத்தூர் மற்றும் ரெட்டேரியில் வியாபாரிகள் கடையடைப்பு

kolathur and retteri shops attacked by political mob கொளத்தூர் விவேகானந்தா  நகரில்  நேற்று கடைகள்  தாக்கப்பட்டதை  எதிர்த்து,  கொளத்தூர்   ரெட்டேரி  மற்றும்  அதன்   சுற்றுவட்டார பகுதிகளில்  ஏறதாழ  250 கடைகள் கதவடைப்பு  போராட்டம்  நடத்தினர் . ஞாயிற்று கிழமை  இரவு  அடையலாம்  தெரியாத  கும்பல்  ஒன்று  மெயின்  ரோட்டில்  உள்ள  10 கடைகளின்  கண்ணாடிகளை  உடைத்து  பணத்தை  கொள்ளை  அடிக்கப்பட்டதாக  வியாபாரிகள்  புகர் அளித்தனர் . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின்  மத்திய சென்னையின் தலைவர் தேவராஜ் கூறுகையில் ,தாக்குதலின் போது சில லட்சம் மதிப்புள்ள  பொருட்கள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் வியாபாரி  ஒருவர்  தாக்கப்பட்டுள்ளார் . ஆகையால்  குற்றவாளிகள் மீது  போலிசார்  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தி , ஒரு நாள் கடையடைப்பு  போராட்டம்  நடத்துகிறோம்  என்று  கூறினார் .  அதே சமயம் ,புழல் போலீஸ்…

Read More

ஆப்கான் அமெரிக்க தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் அரசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆப்கான் நங்கர்ஹர் மாகாண டொர்கானில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து நேட்டோ ராணுவத்தளவாடங்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த முக்கிய ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு நின்றிருந்த தளவாட லாரிகள் மீது தாக்குதல் நடத்தி எரித்தனர். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆப்கான் அல்லது அமெரிக்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணுவத்தளத்தில் இருந்த நிறைய லாரிகள் எரிந்ததால் அதிகம் சேதமும் ஏற்பட்டிருக்க கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் அடுத்த ஆண்டுக்குள் வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள்…

Read More

நோக்கியா செல்போன் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்!

Microsoft to buy Nokia’s mobile phone business for $7.2 billion உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும்…

Read More

சீன வாத்தியாரின் அத்துமீறல் முத்தம் கொடுத்தால் பரீட்சையில் பாஸ்

Chinese teacher forces school girls to kiss him to get diploma சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை’. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சரிப்பட்டு வராதவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்து விடுவாராம் இந்த ஆசிரியர். சிரித்துக் கொண்டே முத்தங்களை பெறும்…

Read More

புளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!

Cuba to Florida swim : Woman, 64, sets record அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார். 177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக கடந்து வெற்றிபெற்றுள்ளார். கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள்,…

Read More

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்தில் பற்றிய திடீரென தீ

spice jet flight forced to  land after fire   தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்த காரணத்தால் அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சென்னை- தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை தூத்துக்குடி வாகைகுளத்தில் இருந்து பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தில் விமானம் ஊர்ந்து கொண்டிருந்த போது திடீரென புகை பரவியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இதேபோல்…

Read More

தூத்துக்குடியில் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து கருகி நாசம்

A fish auction house in Tuticorin was gutted in fire தூத்துக்குடியில் தனியார் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் கென்னடி. இவருக்கு சொந்தமான மீன் ஏலக்கூடம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ளது. இந்த ஏலக்கூடத்தில் இன்று காலையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புபடை வீரர்கள் நிலையஅதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து வந்தனர். தீயணைப்புடை வீரர்கள் சுமார் 30நிமிடநேரம் போராடி தீயை தடுத்து அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் ஏலக்கூடத்தில் இருந்த 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். A fish…

Read More

பூனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை லிப்டில் கற்பழிப்பு

Mentally challenged woman raped in Pune hospital பூனாவில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பணியாட்கள் இருவர் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனாவின் போசாரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர் வார்டு பணியாள‌ர் மற்றும் வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மருத்துவமனையின் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியோடு, வார்டு பணியாள் மற்றும் வாட்ச்மேன் லிப்டில் வைத்து கற்பழித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மருத்துவமனையின் வார்டு…

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி ஸ்வாதி

Indian American Swati Dandekar in race for US Congress அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி தன்டேகர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் ஐயோவா மாகாண சபையின் மேரியான் பகுதி பிரதிநிதியாக இவர் நாக்பூரைச் சேர்ந்த இவர் 1973ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இவர் தனது கணவர் அரவிந்த் மற்றும் இரு மகன்களுடன் மேரியான் பகுதியில் வசித்து வருகிறார். விவசாயம், தொழில்நுட்பம், சர்வதேச விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர் இவர். English News: Indian American Swati Dandekar in race for US Congress Indian American Swati Dandekar of Democratic Party has announced her candidacy for the 1st Congressional District of Iowa. Dandekar is a former Iowa legislator representing the…

Read More

டெல்லி பல்கலைக்கழகம் மாணவிகள் ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடை

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops கல்வி சுற்றுலா செல்லும் டெல்லி பல்கலைக்கழக மாணவ-மாணவியர் இந்தந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக இன்று பஞ்சாப் கிளம்புகின்றனர். அவர்கள் ஞானோதயா எக்ஸ்பிரஸ் மூலம் பஞ்சாபுக்கு கிளம்புகிறார்கள். இந்த ரயில் அவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டுள்ளது. முன்னதாக மாணவ-மாணவியர் இந்த சுற்றுலாவின்போது எந்தெந்த உடைகளை அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 900 பேர் ஒரு வார கால சுற்றுலாவாக கிளம்புகிறார்கள். அவர்கள் பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர் ஆகிய இடங்களுக்கும், ஹரியானாவில் குருஷேத்ராவுக்கும் செல்கின்றனர். மாணவிகள் ஸ்கர்ட்டுகள், குட்டைப் பாவாடை, ஷார்ட்ஸ், ஸ்பெகட்டி ஆகியவை அணியவே கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் மற்றும்…

Read More