சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .

pakistani black money in swiss banks சூரிச் : மக்கள் தொகையிலும்,  பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும். சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது.…

Read More

சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

england prince william indian origin இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம் தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது. ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால் வில்லியம்ஸ் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது. england prince william indian origin

Read More

116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.

Guinness World Record 116 years old Mr Kimura dead World’s oldest person dies aged 116 ஜிரோயிமொண் கிமறு அவர்கள் உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில்  இடம்பிடித்தவர் .1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம்  தேதி  பிறந்தவர் . ஜிரோயிமொண் கிமறு ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில்  பணியாற்றினார். பின்னர் 90வயது வரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 15 குழந்தைகள் இருக்கின்றனவாம். ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று   இயற்கை மரணம் எய்தினார். According to Guinness World Records, Mr Kimura was the first man in…

Read More

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர் ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர். புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர்  பயத்தில் உள்ள…

Read More

மீன் குழந்தைகளுக்கு தோல் நோய் வரது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

fish is healthy food, its cure skin disease for 1year child ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத்…

Read More

அல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்பு

al qaeda chemical weapons factory in iraq ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும்…

Read More

பாகிஸ்தான நவாஸ் ஷரிப் இரண்டு நாட்களில் பதவிப் பிரமாணம்

Nawaz Sharif, The Prime Minister of Pakistan பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இதில் நாவப் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 126 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.அக்கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்ற கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப்பை இன்று இன்று (27.5.13)செய்தனர்.இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் வருகின்ற மாதம் 1ம் தேதி  கூடுகிறது. புதிய எம்.பி.க்களுக்கு அன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 எம்.பி.க்கள் சமீபத்தில் நவாஸ் ஷெரீப் கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து அவரது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது. இதன் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு மேலும் 37 தேர்ந்தெடுக்கப்படாத எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். இதனால்,…

Read More

வட கொரியாவின் அழைப்பை தென்கொரியா நிராகரிப்பு

south korea reject north korea invites போர் நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா நிராகரித்துள்ளது. அதோடு, தங்களது நாட்டு அதிபர் மீதான வட கொரியாவின் விமர்சனங்களையும் தென்கொரியா கண்டித்துள்ளது. இது தொடர்பாக சீனாவிற்கு வடகொரியா முன்னர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் முன்னிலையில் தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது. south korea reject north korea invites

Read More

ஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது

harry potter book records ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. 25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், படிப்படியாக கூடிக்கொண்டே போனதால் ஏல அரங்கில் பயங்கர நிசப்தம் நிலவியது. இறுதிக் கட்டத்தில் 2 முக்கிய பிரமுகர்கள் மட்டும் போட்டியில் இருந்தனர். இறுதியாக அதில் ஒருவர் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு அந்த புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்’ என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. harry potter book records

Read More