FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge புதுடெல்லி : – பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமாபுரி தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எல்,ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தர்மேந்தர் கோலி. இவர் மீது இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி போலீஸில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த கட்சியினர் பலர் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.எங்கள் பகுதியில் உள்ள வால்மீகி கோவிலுக்குள் அவர்கள் மது பாட்டிலை வீசினர் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்
சேலம்: அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல் இன்று காலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன்படி அ.தி.மு.க,. 35 ஆயிரத்து ஆயிரத்து 609 ஓட்டுக்கள் பெற்று 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது சுற்று தவகலின்படி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரத்து 880 ஓட்டுக்கள் தி.மு.க பெற்றுள்ளது. 1,276 பேர் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என பதிவு செய்துள்ளனர். தே.மு.தி.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து…
Read Moreபுதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்
இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஊழலை எதிர்த்து போராடி ‘ஆம்ஆத்மி’ எனும் அரசியல் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். தில்லியில் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அக்கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதனையடுத்து புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முதலில் ஷீலா தீட்சித் முன்னணியில் இருந்தார். ஆனால் அடுத்து கெஜ்ரிவால் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணிக்கு வந்தார். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் 1500 ஓட்டுகள் முன்னணியில் இருக்கிறார். முதல்–மந்திரி ஷீலா தீட்சித் தோல்வி முகத்தில் உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5,000 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார். லட்சுமி நகர் தொகுதியில் மந்திரி ஏ.கே.வாலியா பின்தங்கிய நிலையில் உள்ளார். இதே போல் இரண் வாலியா, ஹருண்யுசுப்,…
Read Moreதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.
10 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மாற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ஹெச்.வசந்தகுமார் உள்பட 17 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப. சிதம்பரம், சுதர்சன நாச்சிப்பன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அடங்கிய செயற்குழுவில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை அகில…
Read Moreபேஸ்புக் கில் உலா வரும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு
ஆதிமுக தலைவரும் செயலாளரும்மான முதல்வர் ஜெயலலித்தா அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது “திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர்” எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என கேள்வி எழுப்புவார், அது உண்மையை நிருபிக்கும் விதமாய் சில நாட்களாக facebook இனைய தளத்தில் பலரின் கருத்து தொகுப்பில் திமுக தலைவர் மற்றும் திமுகா வின் சொத்து மதிப்பை பகிர்கின்றனர் அந்த பகிர்வு இங்கு கீழே தரப்பட்டுள்ளது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. நெஞ்சம் பலகீனமானவர்கள் இதனை பார்க்க வேண்டாம்.…
Read Moreராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் முதல் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரசாரம் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளதால் காங்கிரஸ், பா.ஜ.கவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2087 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 733 பேர் களத்தில் உள்ளனர். இவர்களது வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் 346 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தலா 199 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இதில் பா.ஜ.க.வின் 199 வேட்பாளர்களில் 150 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல காங்கிரசின் 199 வேட்பாளர்களில் 139 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் 190 வேட்பாளர்களில் 35 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். கோடீசுவரர் வேட்பாளர்களில் காங்கிரசை சேர்ந்த விஸ்வேந்திர…
Read Moreதமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…
DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state” “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:- அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச்…
Read Moreடெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…
Read Moreஅர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்
Delhi: Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினுடைய நிறுவனரும் தலைவருமான திரு.அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியில் ஓர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் திரு.ராகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியை சார்ந்த திரு.ராகேஷ் அகர்வால் ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “உங்களை மட்டுமே நீங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் ஓர் சர்வாதிகாரி போக்கை கடைபிடிக்கிறீர்கள். உங்களது பெயர் மற்றும்…
Read Moreதூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்
Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்… எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்… 01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல்…
Read More