அரசு சிறிய பேருந்துகளில் இருக்கும் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிட மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதி மன்றத்தில் விசாரணை

Tamilnadu Government small bus with ADMK Two leaves Symbol to be erased : M.K Stalin சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது என்னெவென்றால் : – முதல்-அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்ற்று கொண்ட பின், அவரது அதிமுக கட்சியின் விளம்பரப்படுத்துவதற்காக ‘இரட்டை இலை‘ சின்னத்தை சிறிய பேருந்தில் பொறித்து அரசாங்க பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில்…

Read More

அ.தி.மு.க அரசு தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

DMK accused AIADMK tamilnadu government for misusing the government funds and sources to get benefits in state assembly election to be held at yercaud அ.தி.மு.க அரசு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் விதிகளை மீறி இடைத்தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க நாடாளுமன்றக்குழுவின் தலைவர் திரு.டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு.வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை இந்த விதி மீறல் பற்றி புகார் ஒன்றை அளித்தார். தி.மு.க வினுடைய அமைப்புச்செயலர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.வி.பி. துரைசாமி ஆகியவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதியன்று தமிழக அரசு அறிமுகம் செய்த 660 சிறிய பேருந்துகளில்…

Read More

நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் சேர்க்கை

Tv News readers Fathima babu and Nirmala periyasamy joined AIADMK party , party chief J.Jayalalitha announced them as party speakers திங்கள்கிழமை சென்னையில் நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கட்சியில் சேர்ந்தனர். இது பற்றி, அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வெளியிட பட்ட அறிவிப்பில், திருச்சி-2 தொகுதியினுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சௌந்தரராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் நகர மன்றத் தலைவரான ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவரான திரு.கா.கோவிந்தராஜ பெருமாள், செய்தி வாசிப்பாளர் திருமதி.பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.நிர்மலா பெரியசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள். புதியவர்களுக்கு பொறுப்புகள்: நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியவர்கள்…

Read More

கனிமொழி, தயாளு அம்மாளிடம் நாளை 2ஜி ஊழல் வழக்கு விசாரணை!

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal. சென்னை: கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறயிருக்கிறது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில்  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தயாளு அம்மாளுடைய உடல்நிலை காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையினுடைய பரிந்துரையின் படி தயாளு அம்மாள் வீட்டிற்கு எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி நேரடியாக போய் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (28–ந்தேதி) காலை சுமார்…

Read More

பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்

BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case. பிரதமர் மன்மோகன் சிங் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று  முன்னாள் நிலக்கரித் துறைசெயலர் பி.சி.பரேக் கூறியிருக்கிறார். சி.பி.ஐ தன் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும்  முறைகேடு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் தான் வெளிப்படையான அணுகுமுறையை இந்த சுரங்க ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தார். பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி இந்நிலையில் பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால்…

Read More

நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்

Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று  செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில…

Read More

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்

Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…

Read More

சோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்

Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு மாநிலமாக ஆக்கும் மத்திய அரசினது முடிவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த தன்னிச்சையான ஒருதலைப்பட்ச செயல்பாட்டை எதிர்ப்பது மட்டும் இல்லாமல் தெலங்கானா பிரச்சனை மேலும் விரிவடைய சோனியா காந்தியே காரணம். அவர் மக்களுடைய  உணர்வுகளை திட்டம் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என  குற்றம் சாட்டினார். மேலும் இந்த ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து மற்றொரு மாநிலத்தை உருவாக்கி அதன் மூலம் வரும் கால சந்ததியினருக்கு ஒரு மிகபெரும்  மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார். சோனியாகாந்தியின் தன்னிச்சையான சுயநல முடிவால் ஆந்திராவின் இரு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவது உறுதி. இதைப்பற்றி முற்றிலும் கவலையில்லாமல் தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக…

Read More

திருச்சி மாநாட்டில் மத்திய அரசை சரமாரியாக தாக்கி மோடி உரை

Narendra modi speech in trichy திருச்சி: மத்தியில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு தொடர்ந்தால், நம் இளைஞர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என திருச்சியில் 26.9.2013 வியாழன் நடந்த பா.ஜ.க. இளந்தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி பேசினார். திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேளராவில் இருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி திருச்சி வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். இந்த…

Read More

இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்

Senior Congress N D Tiwaris sexy dance with lady உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா…

Read More