Rahul gandhi sent birthday greeting to DMDK chief Vijayakanth 25 ஆகஸ்ட் 2013: இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி, டெலிபோனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனது மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். செய்தியாளர்கள் கூட்டத்தில், வரும் 2014- தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்டனர். முதலில் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கிறேன் என்றார். அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
டுவிட்டரில் நடிகர் விஜய் பெயரில் விஷமிகள் பொய் தகவல்
news from Twitter regarding Actor vijay in politics is False சென்னை: விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு டுவிட்டர் இணையதளத்தில் கணக்கு வைப்பே இல்லை அவர் கூறியதாக வந்த செய்தி பொய்யான ஒன்று என அவர் தரப்பு செய்திகள் தெருவிக்கின்றன நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்ததாக இணையத்தில் வெளிவந்தது . அவர் பெயர் கொண்ட டுவிட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம், எனது ரசிகர்கள் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம்…
Read Moreநாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா
Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat கர்நாடகாவில் உள்ள இரு மாக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல பெங்களூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற…
Read Moreஅரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும்: நடிகர் விஜய்
actor vijay twitter news words நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் சமீபத்திய ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலே அவரை இவ்வாறு கூற வைத்துள்ளதாக தெரிகிறது. ‘தலைவா’ படத்தின் விளம்பரத்தின் கீழ் ‘Time to lead’ ( தலைமையேற்கும் தருணம் ) என்று போடப்பட்ட வாசகமும், அப்படத்தில்…
Read Moreஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டது: பாஜக
UPA has pushed the nation hundred years back: Naqvi நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறான கொள்கைகளால் நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான 10 வருட ஆட்சியானது நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டு இருக்கிறது. நாங்கள் உலகில் சிறந்தது என்று சொல்வது வழக்கம். ஆனால், இப்பொழுது உலகில் மிகவும் பின் தங்கிய என்று அது மாறியிருக்கிறது. நாடு மிகப்பெரிய பொருளாதாரப் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய அரசியல் பெருந்துயரமாக மாறியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. பொருளாதார உலகமயமாக்கல் உலகக்கடனில் திருப்பி விடப்பட்டிருக்கிறது. பாரதீய ஜனதா…
Read Moreஅ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான்: ராமதாஸ் அறிக்கை
Dr.Ramadass blames aiadmk Government அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான் என்று கூறும் அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அடுக்கடுக்கான அடக்கு முறைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட 144 தடையாணை, இடையில் சில பகுதிகளில், சில வாரங்கள் தளர்த்தப்பட்டதை தவிர, 10 மாதங்களாக நீடிக்கிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட 144 தடையாணையும், இடையில் சில நாட்கள் தளர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை. இதனால், இம்மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியாளர்களின் தவறுகளை கண்டித்து குரல் கொடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கடமையாகும். ஆனால், இந்தக் கடமையைக் கூட செய்யவிடாமல் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை…
Read Moreநாடாளுமன்றத்தில் உறங்கிய ஆந்திர எம் பி
Member of parliament in deep sleep at parliament Cong MP Caught Sleeping In Indian Parliament நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்ஜான் அன்று கடந்த 9ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார். இதற்கு முதலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான்…
Read Moreஅவதூறாக செய்தி ஒளிபரப்பிய கேப்டன் டிவி ஊழியர்கள் மீது வழக்கு
முதல்வர் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியது தொடர்பாக கேப்டன் டிவி ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் குறித்து செய்தி ஒளிபரப்பானது. அதில், முதல்வர் குறித்தும், மக்கள் பணம் ரூ. 7.25 கோடியை தேவை இல்லாமல் செலவழிப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி ஆதாரம் இல்லாமலும், உறுதிப்படுத்தாமலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்று கூறி முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் கேப்டன் டிவி செய்தி வாசிப்பாளர் மைதிலி கண்ணன், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த…
Read Moreநேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்
இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார். பிரதமரின் சுதந்திர தின உரை திருப்தியாக இல்லை. இவரது பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்ப நலனில்…
Read Moreஅவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
Vijayakanth gets exemption from appearing in court சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில்…
Read More