அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.

Read More

வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை:உச்சநீதிமன்றம் டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

டெல்லி :நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது.இந்திய தேர்தல் ஆணையம் இந்த தடவை (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் நடைமுறைப்படுத்தியது. காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் தாமதம் ஆகும். எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது கடினம் என தேர்தல் ஆணையம்…

Read More

கிரன் பேடி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது:சென்னை உயர்நீதிமன்றம்

கிரன் பேடி புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது:சென்னை உயர்நீதிமன்றம் மதுரை:புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி ஆவார். புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுனர் அறிக்கையாக கேட்டுப் பெறும் வகையில் மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார்.எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜர் ஆனார்.இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.இதனால் புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி அறிக்கை பெற முடியாது.

மதுரை:புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி,புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக கேட்டுப் பெறும் வகையில் மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுனர் கிரன் பேடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார்.எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜர் ஆனார்.இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.இதனால் புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுனர் கிரன் பேடி அறிக்கை பெற…

Read More

உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றம்:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

Read More

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கு: மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல் வழக்கு மனுதாரர் தரப்பில் முக்கிய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது ஆதாரங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கவோ , சேதப்படுத்தவோ இடம் தந்துவிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையின் முடிவில் வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும்,அவற்றை இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார் . அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.அதை டைப் செய்ய வேண்டாம் என்றும் ,தகவல்கள் கசியாமல் இருக்க கைப்பட எழுதி தாக்கல் செய்ய நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் செய்தார்.போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு 1.5 கோடி வரை பணம் தருவதாக கூறியதை வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தெரிவித்தார்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது…

Read More

உச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம்: 'டிக் டாக்' நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 'டிக் டாக்' நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.'டிக் டாக்' நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ‘டிக் டாக்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.’டிக் டாக்’ நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது,

Read More

டெல்லி நீதிமன்றம்:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் டெல்லி நீதிமன்றம் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது. மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.

டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது. மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.

Read More

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு 7 ஆண்டு சிறை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் என்னிடம் பாலியல் உறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார் . அதுமட்டும் இல்லாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . அந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்துள்ளார்.அதனால் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் .இந்த தண்டனையை எதிர்த்து…

Read More

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அந்த மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது . இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான…

Read More

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை பிசிசிஐ-யின் மத்தியஸ்தரிடம் ஒப்படைத்திருந்தோம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்தியஸ்தர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி :கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ,அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை…

Read More