உச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம்: 'டிக் டாக்' நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 'டிக் டாக்' நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.'டிக் டாக்' நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ‘டிக் டாக்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.’டிக் டாக்’ நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது,

Related posts