The last nuclear reactor closed down in Japan டோக்கியோ: ஜப்பானில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. எனினும் ஜப்பானில் அணுசக்திக்கு பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் இந்த உலை மீண்டும் திறக்கப்படுவது உறுதி இல்லை என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் அணு கதிர் வீச்சு ஏற்பட்டது. இதனால் பெரும் பெரும் பீதியும் பாதிப்பும் ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக ஜப்பான் மக்கள் அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உடனடியாக அவைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் ஜப்பானில் உள்ள அணு உலைகளை மூடுவதற்கு…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
அணில் அம்பானி வருமான வரி கணக்கு சட்டவிரோதமாக முடக்கம்
anil ambani income tax account hacked by a Chartered accountant lady student அணில் அம்பானியினுடய வருமான வரி கணக்கு சட்டவிரோதமாக முடக்கிய 21 வயது சி.ஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. மும்பையில் உள்ள கணக்கு தணிக்கை நிறுவனம் ஒன்று அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் திரு.அனில் அம்பானியின் வருமான வரி கணக்கை பராமரித்து வருகிறது. கடந்த 26 ஆம் தேதி ஜூன் மாதத்தில் அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனத்துக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த இமெயிலில், அனில் அம்பானியின் வருமான வரி இணையதள கணக்கிற்கு உண்டான பாஸ்வோர்ட் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 12-ம் தேதியன்று மீண்டும் இதே போல் ஈமெயில் ஒன்று வந்தது. இதனால் பீதி…
Read Moreஇந்திய ராணுவ ஏவுகணை 'அக்னி 5' 2வது முறையாக வெற்றிகர சோதனை
Nuclear-capable Agni-V tested second time in Odisha coast of Wheelar’s Island successfully at 08:50 hours from launch complex of Integrated Test Range (ITR) இந்திய ராணுவதை சார்ந்த விஞ்ஞானிகள் ஏவுகணை தயாரிப்புகளில் ஈடுபட்டு அக்னி ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்கள். அக்னி ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து குறித்த இலக்கை தாக்கி அழிக்க கூடிய வல்லமையை பெற்றது. தற்சமயம், அக்னி 5’ ஏவுகணையை இந்திய ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இன்று காலை 8.50 மணிக்கு அக்னி 5’ ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஓடிச மாநிலத்தில் வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிருந்து அக்னி 5’ ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அறிவித்தனர். அக்னி 5’ ஏவுகணை சுமார் 5000 கி.மீ.…
Read Moreஅமெரிக்க யுனைட்டட் ஏர்லைன்ஸ் டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை
United says it will honor free tickets sold by mistake அமெரிக்காவில், கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக அங்கு செயல்படும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான பயண டிக்கெட்டுகள் மிக குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும், கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனத்தின் விமான பயண சீட்டுக்கள் ஆன்லைன் மூலமாக இன்டர்நெட்டில் முன்பதிவு செய்தவர்கள் இன்பஅதிர்ச்சியும், ஆச்சரியத்திற்கும் உள்ளனார்கள். இந்த கம்ப்யூட்டர் கோளாறினால் விமான பயண சீட்டுக்கள் கட்டணம் ஏதும் இல்லாமலும், கட்டணங்கள் மிகக் குறைந்த அளவிலும் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்களுக்கு கிடைத்தது. அந்த விமான பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டுமே செலுத்த வேண்டி இருந்தது. இந்த கம்ப்யூட்டர் கோளாறு சம்பந்தமாக அறியப்பட்டவுடன் அந்த விமான நிறுவனம்…
Read Moreஇன்று அம்மா குடிதண்ணீர் பாட்டில் அறிமுகம் ஒரு லிட்டர் பத்து ரூபாய்!
Jayalalitha to launch scheme to provide mineral water at ten rupees அரசு பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பத்து ரூபாய்க்கு அம்மா குடிதண்ணீர் வழங்கும் திட்டம் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் சென்னை கோட்டையில் காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு வெளியீடு செய்துள்ள செய்தி குறிப்பினில் கூறியிருப்பதாவது:– இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கபட்டது. அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார். இதன் முதல் நிலையாக, திருவள்ளுர் மாவட்டம்,…
Read Moreகுளிர்சாதன பெட்டியினுள் ஒளிந்து விளையாடிய 3 சிறுவர்கள் பலி
South African children suffocate inside old refrigerator தென்னாபிரிக்காவின் வட மேற்கு மாகாண அடமேலாங் நகரில் 3 சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான்கு வயதான இருவர், மூன்று வயது ஒருவர் என விவரம் தெரியாத அந்த சிறுவர்கள் உள்ளே ஒளிந்திருந்தபோது அந்த குளிர்சாதனப்பெட்டி மூடிக்கொண்டது. பின்னர் அந்த மூன்று சிறுவர்களாலும் அப்பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி உள்ளேய இறந்து கிடந்தனர். இந்நிலையில் அந்த சிறுவர்களை காணாது பெற்றோர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் சிறுவர்களின் உறவினரான ஒரு மூதாட்டி அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவர்களின் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பாவி சிறுவர்கள் இறந்துபோனது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை வரவழைத்துள்ளது. South African children…
Read Moreரூ.9 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர் கடலில் போடப்பட்டது
Silver Ganesh sits in deep sea 20 km off city coastline சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 20கிலோ வெள்ளியாலான விநாயகர் சிலை படகு மூலமாக கடலுக்குள் கொண்டு சென்று போடப்பட்டது. நேற்று சிவசேனா மூலம் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. காசிமேடு பகுதியில் 41 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. புளியந்தோப்பு பகுதியில் 20 கிலோ எடை கொண்ட ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகர் சிலையையும் நேற்று கடலில் போடுவதற்கான ஊர்வலம் நடந்தது. குதிரை சாரட் வண்டியில் வெள்ளி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வண்டியை ராஜா வேடம்…
Read Moreசர்வதேச கண் மருத்துவ மருத்துவ விமானம் கொல்கத்தா வந்தது
Hi-tech flying hospital a hit in Kolkata உலகில் உள்ள அனைத்து மக்களது கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை முற்றிலும் களைய போராடும் லாப நோக்கம் இல்லாத அரசு சாரா அமைப்பினுடைய விமானம் ஒன்று தற்போது கொல்கத்தா நகரை வந்தடைந்துள்ளது. ஆர்பிஸ் எனப்படும் சர்வதேச கண் மருத்துவ லாப நோக்கில்லாமல் அரசு சாரா அமைப்பு, கடந்த 1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச கண்மருத்துவ அமைப்பு வளரும் நாடுகளில் உள்ள மக்களின் கண் பார்வையை நீக்கும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இந்த மருத்துவ அமைப்பின் சிறப்பு அம்சமாக டிசி 10 ஜெட் விமானம் ஒன்றில் உயர் ரக தொழில் நுட்ப கருவிகள் கொண்ட ஒரு மருத்துவமனை இயங்குகின்றது. இதில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், தகவல் தொடர்பு மற்றும் தளவாட ஊழியர்கள், விமானப்…
Read Moreசீனாவில் பால், ரொட்டி சாப்பிட்ட 180 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
180 children fall sick after having meals at school in China மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 180க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் பாலும், பிஸ்கெட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்தப் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தலைவலி, வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக அந்த குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 168 மாணவர்கள் குணமடைந்து வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் 12 பேர் மருத்துவமனை காண்காணிப்பில் உள்ளனர் என்று மாகாண அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் பிஸ்கெட்டுகளின் மாதிரிகள், மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு பால் காரணமாக இருக்கலாம் என்று மாகாண அரசின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆயினும்,…
Read Moreஉலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிப்பு
One third of food wasted, costs world economy $750 bn: UN ஒவ்வொரு ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் வீணாக போவதால், உலகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிக்கபடுவதாக ஐ.நா.சபையின் விவசாய மற்றும் உணவு நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட அய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். அந்த ஆய்வின்படி, வருடந்தோறும் சுமார் 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறதாம். வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின்…
Read More