Three-fold Jump in Drink-driving Cases அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் வெறும் 16,881 பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். ஆனால் இந்தாண்டு இந்த எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.அதாவது இந்தாண்டு நவம்பர் மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாதனை(!) படைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல்…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்
சேலம்: அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல் இன்று காலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன்படி அ.தி.மு.க,. 35 ஆயிரத்து ஆயிரத்து 609 ஓட்டுக்கள் பெற்று 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது சுற்று தவகலின்படி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரத்து 880 ஓட்டுக்கள் தி.மு.க பெற்றுள்ளது. 1,276 பேர் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என பதிவு செய்துள்ளனர். தே.மு.தி.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து…
Read Moreபுதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்
இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஊழலை எதிர்த்து போராடி ‘ஆம்ஆத்மி’ எனும் அரசியல் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். தில்லியில் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அக்கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதனையடுத்து புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முதலில் ஷீலா தீட்சித் முன்னணியில் இருந்தார். ஆனால் அடுத்து கெஜ்ரிவால் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணிக்கு வந்தார். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் 1500 ஓட்டுகள் முன்னணியில் இருக்கிறார். முதல்–மந்திரி ஷீலா தீட்சித் தோல்வி முகத்தில் உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5,000 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார். லட்சுமி நகர் தொகுதியில் மந்திரி ஏ.கே.வாலியா பின்தங்கிய நிலையில் உள்ளார். இதே போல் இரண் வாலியா, ஹருண்யுசுப்,…
Read Moreதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக மாற்றம்.
10 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மாற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி வெளியிட்டார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ஹெச்.வசந்தகுமார் உள்பட 17 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப. சிதம்பரம், சுதர்சன நாச்சிப்பன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அடங்கிய செயற்குழுவில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை அகில…
Read Moreஎந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும்
Coffee machines ‘leave lead in drink’ எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும் என ஜேர்மனின் பாதுகாப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. ஜேர்மனின் பெர்லின் நகர இடர்மதிப்பிடு நிறுவனம் மூன்றில் இரண்டு பங்கு எஸ்பிரஸோ காபி எந்திரத்தை சோதனை செய்தது. இதுகுறித்து அந்நிறுவனமும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில், இந்த காபி எந்திரத்தை 100 முறை சுத்தம் செய்தாலும் அதில் அதிக அளவு ஈயம் வெளிவருவகின்றது. மேலும் இதன் இரண்டாம் பரிசோதனைக்கு பின்பும் ஈயத்தின் தாக்கம் காப்பியில் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் இவ்வியந்திரத்தை சுத்தமிடும் பொழுது இதிலுள்ள கால்சிய தன்மை குறைந்து ஈயத்தில் தன்மை நிறைந்துவிடுகின்றது.இதன் மூலம் மக்களுக்கு உடல்நல கேடு நேரிடும் என பாதுகாப்பு ஆய்வு அறிவிக்கின்றது. “காப்யூல்” அல்லது “காபிபாட்”…
Read Moreதுபாயில் மரத்தில் தொங்கிய இந்தியரின் சடலம் மிட்பு
Body of Indian man found in Dubai துபாயின் தொழில்பேட்டை ஒன்றின் அருகே உள்ள மரத்தில் இந்தியர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அல்குவோஸ் தொழில்பேட்டை வழியாக காலை ஓட்டப் பயிற்சிக்கு சென்ற ஒருவர் அங்குள்ள மரத்தில் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் இருந்து பிரேதத்தை இறக்கி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் இறந்த நபர் இந்தியர்தான் என்பதை உறுதிப்படுத்திய துபாய் போலீசார், இறந்த நபர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை ஊழியர்கள் விடுதியில் தங்கியிருந்தவராக இருக்கலாம் என்று கூறினர். அவரது பெயர், ஊர் பற்றிய விபரங்களை சேகரிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். Body of Indian man found in Dubai…
Read More18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி
Chinese School girl Mauls Toddler in Elevator Then Throws him off From 25Th Floor Building Balcony, Child Alive but Vegetable State 18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி சீனாவில் 18 மாத குழந்தையை 25 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 10 வயது சிறுமி தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள சொங்குயிங் நகரில் 25 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் பெண் ஒருவர் அவரது 18 மாத ஆண் குழந்தையுடன் லிப்டில் ஏறினார். அப்பெண் நிறைய பொருட்களை தூக்கிக்கொண்டிருந்ததால், குழந்தையை லிப்டில் அவரது அருகில் நிற்கவைத்துக்கொண்டார். லிப்ட் நின்றதும், பொருட்களை வெளியே வைக்கும் அவரசரத்தில் குழந்தையை லிப்டிற்குள் விட்ட அவர், மீண்டும் லிப்டை நிறுத்துவதற்கு அதனுள் 10 வயது சிறுமி ஒருவர்…
Read Moreஒரே நேரத்தில் இரண்டு சேனல்கள் பார்க்ககூடிய டிவி
2 Channels can be seen in 1 TV டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும். எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு அந்த அந்த சேனல் மட்டும் தெரியும். இதன் திரை சினிமா திரை போன்று சற்று சாய்ந்து இருப்பதால் இதன் குவாலிட்டி பிரம்மாதம்…. 2 Channels can be seen in 1 TV
Read Moreஇந்தியாவில் மருந்து மத்திரை வாங்கியே ஏழையாகும் 4 கோடி பேர்
இளவயதில் ஆரோக்யத்தினை தொலைத்து பணத்தை சம்பாதிக்கின்றனர். அதுவே முதுமை பருவத்தை ஆரோக்கியத்தினை காக்க சம்பாதித்த பணத்தை செலவு செய்கின்றனர். இன்றைய காலத்தில் நோய்கள் வரும் முன்பே அதற்கேற்ப லட்சக்கணக்கில் பணத்தினை வங்கிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மெடிக்ளைம் இன்சூரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு மருந்து மாத்திரைகளின் செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு 4 கோடி பேர் ஏழைகளாகி விட்டதாக தெரிவிக்கின்றது ஒரு புள்ளிவிபரம். உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம்…
Read Moreமகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமி
3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice மகராஷ்டிராவில் காணாமல் போன மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்தால், அவர் நரபலி போன்ற மூடநம்பிக்கை காரணமாக பலியாகியிருக்காலம் எனத் தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகராஷ்டிராவில் உள்ள யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். உடனே போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அக்குழந்தை யாரென விசாரித்தபோது, மூன்று நாட்கள் முன்னர் அதே இடத்தில் காணாமல் போன ஒரு குழந்தை என தெரியவந்தது. அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.குழந்தையின் உடலில்…
Read More