18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி

Chinese School girl Mauls Toddler in Elevator Then Throws him off From 25Th Floor Building Balcony, Child Alive but Vegetable State

Chinese Schoolgirl Mauls Toddler in Elevator Then Throws him off From 25Th Floor Building Balcony, Child Alive but Vegetable State

18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி

சீனாவில்  18 மாத குழந்தையை 25 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 10 வயது சிறுமி தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள சொங்குயிங் நகரில் 25 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் பெண் ஒருவர் அவரது 18 மாத ஆண் குழந்தையுடன் லிப்டில் ஏறினார். அப்பெண் நிறைய பொருட்களை தூக்கிக்கொண்டிருந்ததால், குழந்தையை லிப்டில் அவரது அருகில் நிற்கவைத்துக்கொண்டார். லிப்ட் நின்றதும், பொருட்களை வெளியே வைக்கும் அவரசரத்தில் குழந்தையை லிப்டிற்குள் விட்ட அவர், மீண்டும் லிப்டை நிறுத்துவதற்கு அதனுள் 10 வயது சிறுமி ஒருவர் சென்றிருந்தார்.

லிப்டில் இருந்த குழந்தை அழுததை கண்ட அந்த சிறுமி குழந்தையை சமாதானம் செய்ய முயற்சித்தார். அதற்கு பின் லிப்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது பார்த்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கையில் தூக்கிவைத்திருந்த குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்ததால், அச்சிறுமி குழந்தையை அப்படியே தூக்கி தரையில் வீசினார். வலியால் குழந்தை துடிக்க அச்சிறுமி இரண்டு முறை குழந்தையை மிதித்து, எட்டி உதைத்தார்.லிப்ட் தொடர்ந்து மேலே செல்வதை கண்டு பதற்றமடைந்த குழந்தையின் தாய், அலறி அடித்துக்கொண்டு 25 வது மாடி நோக்கி ஓடினார். அதற்குள் லிப்ட் 25 வது மாடியை அடைந்துவிட குழந்தையை இழுத்துவந்த அச்சிறுமி, அதை அப்படியே 25 வது மாடியிலிருந்து தூக்கி வீசினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த தாய் குழந்தை பற்றி கேட்டப்போது வேறொரு சிறுவன் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றதாக சொன்ன சிறுமி அதன்பிறகு, தான் குழந்தையை கீழே வீசிவிட்டதாக கூறினார்.அதிர்ச்சியில் உறைந்துப்போன அந்த தாய் அங்கிருந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல தயாராக இருந்ததனர். என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனைக்கு விரைந்த தாயிடம் மருத்துவர்கள் குழந்தை உயிரோடு இருப்பதாகவும், ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின்னரே குழந்தையின் நிலை குறித்து தெரியுமெனவும் கூறியுள்ளனர்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையின் பெற்றோர் சிறுமியின் பெற்றோரிடம் நஷ்ட ஈடு தருமாறு கேட்பது குறித்தும், அச்சிறுமி ஏன் ஒரு குழந்தையிடம் இவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Chinese School girl Mauls Toddler in Elevator Then Throws him off From 25Th Floor Building Balcony, Child Alive but Vegetable State

Related posts