Career first, children later: Women put their eggs on ice எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடும் தைவான் பெண்கள், எதிர்காலத்தில் குழந்தைப்பேறைக் கணக்கில் கொண்டு தங்கள் கருமுட்டைகளைச் சேமிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்களாம். நமது பாட்டிக்காலத்தில் எல்லாம் 12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் எனக் கதைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றோ பெண்களின் திருமண வயது கூடிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம், கல்வியறிவு கொண்ட பெண்கள் சிலகாலமாவது உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க நினைப்பது தான். திருமணத்திற்குப் பிறகு இதன் சாத்தியம் குறைவு என எண்ணுகிறார்கள். உலகளவில் பரவிக் காணப்படும் இந்தக் கருத்துக்களால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதும் தைவான் பெண்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஆசியாவில் உள்ள 14 நாடுகளில் பெண்கள்…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
கப்பலுக்குள் விஷ வாயு கசிவு 2 பணியாளர்கள் மரணம்
Leakage of poisonous gas killed 2 ship workers in Tuticorin port தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகள் இறக்கிய கப்பலின் உள்ளே சிக்கிய தனியார் நிறுவன பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நான்காவது சரக்கு தளத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து மரத்தடிகள் இறக்கும் பணிகள் நடந்தது. இந்த மரத்தடிகள் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் தனியார் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதியானது. சரக்கு கப்பலின் ஒரு கேப்சர் பகுதியில் மரத்தடிகள் இறக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் மரத்தடிகளை சரிபார்த்தனர். மரத்தடிகள் ஏதும் கப்பலின் உள்ளே உள்ளதா-? என்பதை பார்ப்பதற்காக தனியார் நிறுவன பணியாளர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த விக்டர்மோகன்(40), லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த ஜோபாய் (50) இருவரும் சரக்குகப்பலின் முதல் பகுதி…
Read Moreவீடியோ கேம் விளையாடிவிட்டு பாட்டியை சுட்டுக் கொன்ற சிறுவன்
Boy Kills Granny After Playing video Game 8 Year Old Boy Kills Granny After Playing video Game அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்துள்ளான். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரி ஸ்மாதர்ஸ்(87). அவர் தனது 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுவன் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்ற வீடியோ கேமை விளையாடி உள்ளான். அதன் பிறகு அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பாட்டிக்கு பின்னால் வந்து நின்றுள்ளான். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் தனது பாட்டியின் தலையில் சுட்டான். இதில் மேரி தலையில் குண்டடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். விசாரணையில் சிறுவன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஏதேச்சையாக வெளிவந்ததாக முதலில்…
Read Moreமைக்ரோசாப்ட்டின் அடுத்த சி.இ.ஓ இந்தியரா?.
India born techies in race to replace Microsoft CEO Steve Ballmer மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பொறுப்புக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுகிறார் என்று வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பால்மெர், மைக்ரோசாப்ட்டை பில்கேட்ஸுடன் இணைந்து உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர் பால்மெர். தற்போது மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் சத்யா நடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் தற்போதை கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவருமான குண்டோட்ரா. இந்த இரு இந்தியர் பெயர்தான் மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு அடிபடுகிறது. India born techies in race to…
Read More10 லட்சம் ஹிட் அடித்த ராஜா ராணி டிரெய்லர்
Within 5 days the trailer has received more that 10 lakh hits ஏ.ஆர். முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் ராஜா ராணி. படபூஜை அழைப்பிதழ் தொடங்கி கேசட் ரிலீஸ் வரை இந்த படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. ராஜா ராணி திரைப்படத்தின் டிரெய்லர் திருமணத்தில் தொடங்குகிறது. ஜான், ரெஜினா வாக ஆர்யா – நயன்தாரா ஜோடி நடித்துள்ளனர். அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் , திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் புதுமுக இயக்குநர் அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். Within 5 days the trailer has received more that 10 lakh hits The…
Read Moreசென்னை கோயம்பேட்டில் சாக்கு மூட்டையில் சிறுவன் கடத்தல்
6 year old boy kidnapped in Chennai சென்னை கோயம்பேட்டில் சாக்குமூட்டையில் கட்டி பள்ளி மாணவனை கடத்த முயற்சித்தாக இளைஞர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சேகர். இவர் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சேகரின் மனைவி சித்ரா. இத் தம்பதியின் மகன் முகேஷ் (வயது 6). சின்மயாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முகேஷ் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.முகேஷ் திங்கள்கிழமை இரவு சேமாத்தம்மன் நகர் 3வது தெருவில் வசிக்கும் சித்தப்பா பத்மநாபன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் முகேசுடன் பேச்சு கொடுத்து சாக்லேட் கொடுத்தாராம். அதை பெற்றுக் கொண்ட முகேஷ் சிரித்து பேசியபடி அந்த இளைஞருடன் சிறிது தூரம் நடந்து சென்றானாம். தெருமுனைக்கு சென்றதும் திடீரென அந்த…
Read Moreஉலக அழகிப் போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தல்!
INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN பெண்களை கவர்ச்சிப் பொருளாக வெளிப்படுத்தும் உலக அழகிப் போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. English Summary: INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN One of Indonesia’s most influential Islamic groups is urging the…
Read Moreகுஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி
5 dead after two 7-storey buildings collapse in Gujarat குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். வடோதராவில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 மாடி கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தை அகற்றிய போது அடுக்கு மாடி இடிந்து விழுந்தது. அடுக்குமாடியில் 12 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மீட்பு பணி அங்கு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த 7 மாடி கட்டிடம் வடோதரா மேம்பாட்டு ஆணையத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5 dead after two 7-storey buildings collapse in…
Read Moreஐ.பி.எஸ். அதிகாரி காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார்
Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai காதலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை இடைக்காலப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி (வயது 28). தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கும்போது நானும், வருண்குமாரும் காதலித்தோம். இது எங்கள் பெற்றோருக்குத் தெரிந்து, எங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினோம். நான் சென்னைக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் வருண்குமார் தனது அடுத்த தேர்வுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும்…
Read Moreஓட்டுநரே இல்லா கார் தயாரிப்பில் இறங்கும் கூகுள்
Google to build a fleet of ‘robo-taxis’ ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ-டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது. 2010ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன்…
Read More