தமிழ் சினிமா சிங்கம் இயக்குனர் ஹரி கோபாலகிருஷ்ணன் அவரது வரவிருக்கும் சிங்கம் 2 பாகம் ஒரு தொடர்ச்சி அல்ல அதன் விரிவாக்கமாக இருக்கும் என்கிறார். சிங்கம் இரண்டாவது பகுதி இன்னும் பல கதாபாத்திரங்காலுன் கூடிய இரண்டாம் பாகமாகும் சிங்கம் முதலாம் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் இதில் சேர்க்கப்பட்டதாகவும், இது மாபெரும் புதிய முயற்சி என தெரிவித்தார்
Read Moreஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூ
ipl-cricket-bangalore-won டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுக்கவே ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பெங்களூர். பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி, டெல்லியை பேட் செய்ய அழைத்தார். டெல்லி அணியில் வார்னர்-சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. வார்னர்…
Read Moreவட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம்
புதுதில்லி: 16 ஏப்ரல் 2013 இந்தியாவில் நிலநடுக்கம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாலை 4.18மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று இந்தியா நேரப்படி மாலை 4.18 மணி அளவில் இந்த லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜஸ்தான், தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியைச் சுற்றிலுமுள்ள சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 20 விநாடிகள் நீடித்து என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தது. இந்த நிலநடுக்கத்தின் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி உடனடித் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Read Moreஈரானில் மிக பெரிய பூகம்பம் 100க்கு மேற்பட்ட மக்கள் பலி?.
துபாய்: பாகிஸ்தான் எல்லை அருகே ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அஞ்சபடுகிறது. 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டது. “இது 40 ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட மிக பெரிய பூகம்பம் என ஈரானிய அதிகாரி தொலைபேசில் கூறினார். அமெரிக்க புவியியல் அலுவலகத்தின் படி நிலநடுக்கம் 15.2 கிமீ (9.4 மைல்) ஆழத்தில் 10:44 GMT மணிக்கு தாக்கியது என தகவல் வெளியிடப்பட்டது.
Read Moreஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு .,
திருத்தணி செவ்வாய் 16ஏப்ரல் 2013 : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மோசடி ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்து கோர்ட்டை ஏமாற்றி ஜாமின் பெற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இவர் எங்கே இருக்கிறார் என தேடி வந்த போலீசாருக்கு ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ.,வை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் டி.எஸ்.பி., பாலச்சந்தர், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கங்காதரன், ஏகாம்பரம் ஆகியோரை கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரை பிடிக்க வீடுகள் மற்றும் அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற…
Read Moreஅமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி முடியும் தறுவாயில் வெடிகுண்டு வெடித்தது. இந்நிலையில் மக்கள் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில வினாடிகளில் மற்றொரு குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். America bomb blast bostan marathan real estate chennai
Read MoreComing Soon – Under construction
Under construction
Read Moreஇந்தியாவில் தங்கம் விலை இன்று மேலும் குறையும்?
சென்னை 16Apr2013: தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை சந்தை நேரம் முடிவடைந்த பிறகு பவுனுக்கு தங்கம் மேலும் ரூ.1,000 குறைந்தது. இந்த சரிவு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) சந்தையில் பதிப்பை உண்டாக்கும். இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தை தொடங்கியவுடன் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.1,000 குறைந்து பவுன் ரூ.19 ஆயிரத்து 72-ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Read Moreதில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி
தில்லி: 16Apr2013: “தில்லி சட்டப்பேரவை தேர்தலில் “ஆம் ஆத்மி’ கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டி. அவர் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது. “கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களைஆம் ஆத்மி’ கட்சி அலுவலகத்தில் அளிக்கலாம்’ என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
Read Moreபழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம்
சென்னை 15Apr2013: பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம் பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் தெனிந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். சமீப நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். இவர் ஞாயிறன்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Read More



