தமிழகத்தில் ராமேசுவரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்கத் தடை காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இத் தடை மே மாதம் 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு அமலில் இருக்கும். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்கள் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Read Moreபிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்
பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆட்சி மன்றக்குழு முடிவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். இது விஷயத்தில் முடிவெடுக்க அக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவு கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில் இருக்காது. இதனை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மோடி…
Read Moreதில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு
உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதல்வர்களின் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (2013ஏப்ரல் 15) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதையடுத்து, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த ஆலோசனையை திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் சார்பில்… இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மாநில சட்ட அமைச்சர் கே.பி. முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர். ராஜகோபால்,…
Read Moreஇலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றது
இராமேஸ்வரம் 15Apr2013: இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை கைது ஞாயிறு அன்று செய்தது நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒன்பது புதுகோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் இரண்டு இலங்கை கடற்படை இழுத்து சென்றது என மீனவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.
Read Moreஇலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்
கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது. உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார். “இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின் மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு,…
Read Moreசீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கம்
1Apr 2013: சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கப்பட்டது என திரு மைக்கேல் ஞாயிறன்று கூறினார். ஞாயிறன்று பெய்ஜிங் மற்றும் அண்டை பகுதிகளில் வேலை செய்யும் 70 தமிழ் நிபுணர்களால் சீனாவில் முதல் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது. இவை சீனாவில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வளர்ந்து வருவதை குறிப்பதாகும். புதிய தமிழ் சங்கம் முக்கியமாக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தப்படும் என்று, திரு மைக்கேல் கூறினார். பெருவாரியான தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா இருந்து ஞாயிறு பெய்ஜிங் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read Moreவட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.
வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேசக் கண்டனங்களை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.…
Read Moreதமிழ்ப் புத்தாண்டு:கோவில்களில் இன்று லட்சார்ச்சனை வழிபாடு
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முக்கிய கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை வழிபாடும், ஆன்மீக சமய சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், ஒப்பிலியப்பன் கோவில் திருச்சேறை சாரநாத பெருமாள் மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்களில் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
Read Moreதமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆளுநர் கே. ரோசய்யா: தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி, பைசாகி மற்றும் விஷு பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெறுப்பை அகற்றி அன்பு, இரக்கம் மற்றும் கருணை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம். இப் புத்தாண்டில் நம்மிடையே ஒற்றுமை ஓங்கி இந்தியாவிலும், தமிழகத்திலும் அமைதியும், வளமும் கொழிக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா: தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தாய் மொழியாம் தமிழ், பழம்பெருமையும்,…
Read Moreவீடு திரும்பினார் கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஜெசி ரைடர் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் பார் ஒன்றின் அருகில் மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். படுகாயமடைந்த இவர் மருத்துவமனையி அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார். கோமாவிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ள ரைடருக்கு மற்ற விடயங்கள் நினைவில் உள்ளபோதும், அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மட்டும் நினைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More



