Pakistani Man buys girl to give birth பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான 55 வயது ஆண், ஆண் குழந்தை வேண்டி 20 வயது இளம் பெண்ணை விலைக்கு வாங்கி, மணந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான், ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற பகுதியைச் சேர்ந்த முதியவர் முகமது அலி. ஐம்பத்தைந்து வயதான இவருக்கு ஏற்கனவே மணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மூன்றும் பெண் குழந்தைகளாக அமைந்ததில் இவருக்கு ஏகப்பட்ட மனவருத்தமாம். அதனால், வேறு ஒரு இளம் பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார் முகமது. அதனைத் தொடர்ந்து, லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை ரூ.1 லட்சத்து…
Read Moreஅமெரிக்காவில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டூத்தீ
Fire crews report progress against massive Yosemite fire அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஸ்தனிஸ்லாஸ் தேசிய பூங்காவில் கடந்த 17–ந்தேதி திடீரென தீ பிடித்தது. பின்னர் இது காட்டுத்தீயாக மாறி பூங்கா முழுவதும் பரவியது. அங்கு தொடர்ந்து வீசி வரும் அனல்காற்றினால் தீ மளமளவென பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க நாடெங்கிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வருகிறார்கள். இந்த தீயினால் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளும் நாசமாகி உள்ளன. தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் சான்பிரான்சிஸ்கோ நகரில்…
Read Moreஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி
wife kills cheating husband with coffee cup in japan 70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை காபிக் கோப்பையால் அடித்தேக் கொன்று விட்டார். ஜப்பானில் தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே. அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த காபிக் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார். பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில்…
Read Moreவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்கல் உடல் உறுப்புகள் தானம்
police escort helps speedy shifting of harvested organs விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குபேந்திரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். இதையடுத்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து குபேந்திரனின் இதயம் சென்னை…
Read Moreஅன்னை தெரசாவின் 103ஆவது பிறந்த நாள்
Today Mother Teresa 103rd birthday அன்னை தெரசா யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் 26-08- 1910 ஆம் தேதி பிறந்தார் இவரத இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ.அன்னை தெரசாவின் செல்லப்பெயர் கோன்ஸா. தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ . தாயின் பெயர் திரானி பெர்னாய். உடன் பிறந்தவர்கள் அக்கா அகா மற்றும் அண்ணன் லாஸர். அன்னை தெரசா தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம்…
Read Moreசென்னை மணலி புதுநகர் சிட்கோ வளாகத்தில் தீ விபத்து
SIDCO Industrial Complex fire in the plastic company சென்னை மணலி புதுநகர் விச்சூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியின் உரிமையாளர் முரளி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை. நேற்று இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டி சென்றனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென குடோனில் தீப்பற்றியது.இதை பார்த்த காவலாளி மணலி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் உருகி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதுதொடர்பாக மணலி, அம்பத்தூர் மற்றும் எண்ணூரில் ஆகிய இடங்களில் இருந்து 4 தீ யணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3…
Read Moreஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது
Crocodile suspected of snatching man in Australia ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ‘மேரி ரிவர்’ என்ற ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார்.பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர். அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். Crocodile suspected of snatching man in Australia Police say they have found…
Read Moreமாடு பிடிக்கப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பலி
3 girls drown in lake trying to stop cow from entering காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள், நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (14), ஷாலினி ( 14) மற்றும் அஜிதா (12). இதில் முறையே தனலட்சுமியும், ஷாலினியும் 9ம் வகுப்பும், அஜிதா 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று விடுமுறை தினமாததால் மூவரும் அருகில் உள்ள பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேய்த்து வந்த மாடு ஒன்று அருகிலிருந்த குட்டைக்குள் இறங்குவதைக் கண்டுள்ளனர் அவர்கள். உடனடியாக மாடு நீரில் மூழ்கி விடாமல் வெளியே விரட்டுவதற்காக ஒருவர் பின் ஒருவராக குட்டையில் இறங்கியுள்ளனர். மூவருக்குமே நீச்சல் தெரியாத…
Read Moreகொடுங்கையூரில் 13 வயது மாணவி மாரடைப்பால் மரணம்
13 year old student dead in heart attack கொடுங்கையூரில் 13 வயதேயான மாணவி நசீஃபா அஃசின் மாரடைப்பு காரணமாக பள்ளியிலேயே இறப்பைத் தழுவியுள்ளார். கொடுங்கையூரில் தையற்கலைஞராகப் பணிபுரியும் சையத் நியாஸ் என்பவரின் மகளான நசீஃபா,வழக்கம் போல நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்று, முதல் வரிசையில் அமர்ந்து வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியை மற்றும் சக மாணவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்து, அவர்கள் மூலம் மருத்துமனைக்கு நசீஃபாவை எடுத்துச் சென்றனர். ஆனால் நசீஃபா திடீர் மாரடைப்பு காரணமாக, மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நசீஃபாவுக்கு இதய நோய் இருந்ததற்கான ஆவணங்களை தந்தை சையத் நியாஸ் காவல்துறையினரிடம் சமர்ப்பித்ததையடுத்து, இம்மரணத்தை வழக்காகப் பதிவு செய்யாமல்…
Read Moreஅமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை
Indian man shot dead in the US கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99…
Read More



