குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை

Man killed for opposing forcing of liquor down monkeys throat டெல்லியில் குரங்கிற்கு மது கொடுப்பதை தடுத்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டெல்லியில் ரயில் நிலையத்திற்கு அருகே இர்பான் என்னும் நபர் ஒருவர், அவரது குரங்குகளை வைத்து வித்தைக்காட்டி சம்பாதித்துவந்தார். இம்மாதம் 14 ஆம் தேதி இரவு, இர்பான் வீதியில் மது அருந்திக்கொண்டிருந்தப்போது, அங்கு ராம் பாபு என்னும் ஒரு நபர் வந்தார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராம் பாபு, இர்பானின் குரங்குகளுக்கு மதுவை கொடுக்க முயன்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த இர்பான் ராம் பாபுவை தடுக்க முயன்றப்போது, அவர் இர்பானின் தலையில் ஒரு செங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ராம் பாபுவை…

Read More

அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜி.கே மணி 15கட்சிகளுக்கு அழைப்பு

PMK Gk Mani against tamilnadu government தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்குமாறு பாமக தலைவர் ஜி.கே. மணி 15 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்திவிடலாம். பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது.…

Read More

சென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்பு

increasing beggars with children in chennai city இந்திய தலைநகர் டெல்லி போன்றே தமிழக தலைநகரில் அதிகரித்து வருகிறது குழந்தை வைத்து பிச்சை எடுப்பது ,சென்னை மாநகரின் சுற்றுப்புற மாநகரில் கை குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது, புறநகர் சென்னை மற்றும் வளர்ந்து வரும் சென்னை பகுதியான போரூர் பூந்தமல்லி ஆவடி தாம்பரம் கோயம்பேடு பேருந்து நிலையம் வடபழனி போன்ற நகர்ப்புறங்களில் கைக்குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. புறநகர் பகுதியான இவ்விடங்களில் சாலையில் வண்டிகள் சிக்னலை எதிர்ப்பார்த்துநின்று கொண்டு இருக்கும் பொழுது குறிப்பாக கார்கள் பைக் மற்றும் லாரிகளை 4அல்லது 5மாத குழந்தையுடன் வந்து முற்றுகை இடுகின்றனர், அவர்களிடம் பணம் கேட்பது கொடுக்கவில்லை என்றால் குழந்தையை அழவைத்து பணம் கேட்பது என அந்த குழந்தயை மழை வெயில் பாராமல் போக்குவரத்து புகையில் கொடுமை படுத்துகின்றனர். மனம்…

Read More

பசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்பு

TN announces larger green houses for weavers பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கட்டப்பட உள்ள வீடுகளின் பரப்பளவை 365 சதுர அடியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில், பெரும்பாலான நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தறிகளை வைத்துத் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் 300 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் போதாது என்றும் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர குறைந்தபட்சம் 365 சதுர அடி தேவை என்று எடுத்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 365 சதுர அடியில் வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு…

Read More

இந்திய ராணுவசெயற்கைக் கோள் GSAT-7 விண்ணில் செலுத்தப்பட்டது

GSAT-7 : India to launch GSAT-7 from Kourou : Indias-first-defence-satellite-GSAT-7-launched-successfully ஜிசாட் 7 செயற்க்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜி சாட்-7 செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், தொலை தொடர்பிற்காகவும், தொடர்ந்து பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோளானது இன்று அதிகாலை 2 மணியளவில் பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 என்ற ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிப்பதோடு, ராணுவ செயல்பாடுகளுக்காகவும் பயன்படவுள்ளது. குறிப்பாக கடற்படைக்கு பல்வேறு வகையில்…

Read More

ஜெகம் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital ஆந்திர மாநிலத்தில் தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஜெகம் மொஹன் ரெட்டி 5 நாள்  உண்ணா விரதம் இருந்து வந்தார். திடீர் என இரவு அவர் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பு காணப்படுகிறது. Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital HYDERABAD: Police tonight broke the five-day-old indefinite hunger strike of YSR Congress chief Y S Jaganmohan Reddy against the bifurcation of Andhra Pradesh, at the Chanchalguda jail here and got him shifted to…

Read More

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

5 terrorist killed at Jammu and kashmir in midnight attack ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நடந்த சண்டையில் 5 தீவிர வாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய பாதுகாப்பு படையின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் செய்தனர் இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் சுட்டதில் 5 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 5 terrorist killed at Jammu and kashmir in midnight attack Five militants have died in an encounter with police and Army in Kangan area of Ganderbal district in Kashmir valley on Friday. Superintendent of Police (SP) Ganderbal Shahid Meraj Rather told the press that Hizbul Mujahideen’s Assadullah group…

Read More

கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்

Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…

Read More

40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது.

Yasin Bhatkal Caught at last புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன்  யாசின் பட்கல்  இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய…

Read More

எந்த நேரமும் டீசல் விலை உயரலாம் ரூ5-6/- அதிகரிக்க வாய்ப்பு

petrol and diesel prices hike டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. English Summary: petrol and diesel prices hike Brace for a sharp rise in petrol and diesel…

Read More