Chinese man donates body before suicide சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை தொடர்பான பிரச்சனையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்.ஐ நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வாங்கின் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கி கொண்டிருந்தார். வாங் தனது உடலை தானம் செய்ய…
Read Moreரஷ்ய மாடல் அழகியை எரித்துக் கொன்ற கணவன்
Police question husband in Russian model’s death ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் வர மனைவிதான் காரணம் என்று சந்தேகமடைந்து கணவனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37) இவர் பிரபல போட்டோ கிராபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். ஒரு முறை இந்தியாவில் மணமகள் அணியும் உடைகளை படம் பிடிக்க திமித்ரி சென்றார். அவருடன் யூலியாவும் சென்றிருந்தார். அப்போது விதவிதமான மணமகள் உடையில் யூலியாவை படம் பிடித்தார் திமித்ரி. அப்போது அவரது அழகில் மயங்கி இந்தியாவிலேயே தனது காதலை சொன்னார். அதை யூலியாவும் ஏற்று…
Read Moreதமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் ஆசிரியர் தினத்தில் நீக்கம்
Tamil Nadu minister vaigai selvan sudden தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் அமைச்சரவை மாற்றத்தின்போது, சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர் வைகைசெல்வன். இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu minister vaigai selvan sudden In a sudden move, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday sacked…
Read Moreபாகிஸ்தானில் ஒரே நாளில் 83,00,00,000 ரூபாய் சம்பாதிக்கும் கிரிமினல்கள்
Pakistan financial capital Karachi black economy generates Rs 830 million daily பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கிரிமினல் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும்…
Read Moreசென்னை மதுரவாயலில் தாய், மகளைக் கொன்று நகைகள் கொள்ளை
Woman, daughter murdered at Maduravoyal, Chennai மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20). இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்து நகை–பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதற்கிடையே தாய்–மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.…
Read Moreபாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் சுட்டுக்கொலை
Gunmen kill Pakistan Navy officer in Karachi பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நசீம் இறந்தார். குண்டுகள் துளைக்கப்பட்ட காரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கராச்சியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அதிபர் நவாஸ்ஷெரிப் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது. Gunmen kill Pakistan Navy officer in Karachi A Pakistan Navy officer, Captain Muhammad Nadeem Ahmed, was shot dead…
Read Moreரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ தனியார் Tv மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவு
Private television channel apologize for wrong news: Court Order நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா தொடர்பாக தவறான செய்தி மற்றும் வீடியோவினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னையும், நித்யானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும் இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி…
Read Moreசிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்
US senators offer support for Syria strike சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா குழுவினர் சிரியா மீது போர் தொடுக்கு செனட்டை அணுகினர் செனட் சபை போருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போரினை 60நாட்கலுக்குல் முடித்து திரும்ப வேண்டும் என்றும் செனட் சபை அமெரிக்காவிற்கு கூறியுள்ளது, இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்க சிரியா மீது போர் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது இதற்கிடையே அமெரிக்காவின் போக்கிற்கு ரசியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது. video link: US senators offer support for Syria strike Leading Democratic and Republican senators have reached a deal on a motion authorizing an attack on Syria. this is a momentum to US President…
Read Moreஅமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை
putin warns US action against syria சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும். சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும்,…
Read Moreசீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன
China chemical spill kills thousands of fish சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர். கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும்…
Read More



