சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்று சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூபாய் 5730 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 21500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.எங்களுக்கும் அதே ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் 14ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Read MoreAuthor: Tamil News Online
சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது .ஆனால் தற்போது 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் 320 ரூபாய்க்கும் கர்நாடகாவில் 335 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Read Moreதமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை…
Read Moreஉச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது
டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது.ஜூலை மாதம் இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தது.இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால் இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளதால், அதற்க்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.…
Read Moreஅமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
Read Moreஅட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
மதுரை: 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.மேலும் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி உள்ளார். இந்த வழக்கில் கடந்த 2019 மார்ச் 21ஆம் தேதி அட்டாக் பாண்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உடல் நல பாதிப்பால் அறுவைச் சிகிச்சை செய்ய போகிறார். அறுவைச் சிகிச்சையின் போது உடனிருந்து கவனிக்க கணவருக்கு பரோல் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரோல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.ஆனால்…
Read Moreஅழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
டெல்லி: மகளிர் நல சமூக அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது .டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே,ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அழைப்பூர்திகளில் பயணிக்கும் பெண்களின் வன்கொடுமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
Read Moreஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read Moreஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி…
Read Moreகொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்
சென்னை: கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோரின் வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த மூவருக்கும் திருநெல்வேலி நீதிமன்றம் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read More