சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி , சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.சுற்றறிக்கையின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related posts
யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...Google Pay-ஐ நிறுத்த Google அதிர்டி அறிவிப்பு! பயனர்கள் அதிர்ச்சி!
சென்னை: Google நிறுவனம், அமெரிக்காவில் Google Pay பயன்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், Google Pay பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “Google...உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சேவைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இல்லை என வாதிப்பு
இன்று (பிப்ரவரி 28) உச்ச நீதிமன்றத்தில், 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் சேவைகளை உள்ளடக்குவது குறித்து...