லண்டன் பள்ளி வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை

Indian-origin teacher in UK gives birth in classroom  இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும்,…

Read More

தென் அமெரிக்காவில் சிறைக்கலவரம் 16 கைதிகள் வெட்டிக்கொலை

At least 16 dead in Venezuela prison clash  வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமான கைதிகள் அடைக்கப்…

Read More

இந்த வருடமும் பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடம்

Gates stays atop Forbes list of America’s richest மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. Gates stays atop Forbes list of America’s richest  America’s superrich just keep getting richer.Forbes…

Read More

வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி

Gun rampage at Washington navy yard leaves 13 people dead அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று பேர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மிகவும் பாதுகாப்பான பகுதியான இங்கு தைரியமாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களில் 50 வயதான ஒரு வெள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ராணுவ உடையில் வந்த மற்ற இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவன் 50 வயதுமதிக்கத்தக்க கறுப்பர் என்று கூறப்படுகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கும் நூற்றுக்கணக்கான போலீசார்…

Read More

எயிட்ஸ் நோயைக் முற்றிலுமாக அழிக்க புதிய மருந்து விரைவில்

Vaccine Clears HIV-Like Virus In Monkeys அமெரிக்க ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த எஸ்.ஐ. வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்துள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குரங்குகளை பாதிக்கும் எச்.ஐ.வி போன்ற எஸ். ஐ, வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மருந்து அளிக்கப்பட்ட 16 குரங்குகளில் 9 குரங்குகளின் உடலில் இருந்து இந்த எஸ்.ஐ.வி தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் லூயிஸ் பிக்கர் தெரிவித்தபோது, எங்களின் ஆய்வில் நாங்கள் உபயோகப்படுத்திய மருந்தை செலுத்தியப்போது, சில செல்களை நாங்கள் தவறுதலாக விட்டிருக்கலாம், ஆனால், இந்த மருந்து குரங்குகளின் உடலில் ஒரு செல்லில் கூட அந்த தொற்று இல்லாதவாறு செயல்பட்டது எனக்…

Read More

17 வது குழந்தைக்காக காத்திருக்கும் அதிசய தம்பதி

Baby no 17 on way for UK’s biggest family இங்கிலாந்தில் உள்ள ஒரு தம்பதி 23 வருடங்களாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை பெற்றுவருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லன்கஷைர் பகுதியை சேர்ந்தவர் ரட்போர்ட். 38 வயதாகும் இவரது கணவர் நோயல், இவருக்கு வயது 41. இந்த தம்பதி தற்போது அவர்களின் 17 வது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். இந்த தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு ’15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்’ (15 Kids And Counting) என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள். இவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களின் மகன் காஸ்பர் பிறந்ததால் 16 ஆனது. இந்நிலையில் தனது 17 குழந்தைக்காக காத்திருக்கும் ராட்போர்ட் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், எங்கள் குடும்பத்தில் 17 வது உறுப்பினரின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன்…

Read More

37 மில்லியன் டாலர் மதிப்பிலான ராக்கெட்டை விண்ணில் ஏவியது ஜப்பான்

Japan Launches Leaner Space Program   ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது. 37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய…

Read More

மெக்சிகோவில் இன்கிரிட் புயல் தாக்கியதில் 24 பேர் பலியாகினர்

Storm and hurricane batter Mexico   மெக்சிகோவில் புயல் தாக்கியதில் 24 பேர் பலியாகினர். மெக்சிகோவில் பசிபிக் கடலில் இன்கிரிட் என்ற புயல் உருவானது. அது பலவீனம் அடைந்து மான்ஷானியோ துறைமுக பகுதியில் கரையை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. அதை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டது. குயரெரோ கடற்கரை மாகாணத்தில் அகாபுல்கோ புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. அதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். 3 பேர் ஆற்று வெள்ளத்திலும், ஒருவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தும் இறந்தனர். குயெர்ரோ நகரில் மலைப்பகுதியில் வாகனம் கவிழ்ந்து உருண்டதில் 8 பேர் பலியாகினர். அது போன்று பியூப்லா, ஒயாசாகா உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துள்ளனர். மொத்தத்தில் மெக்சிகோவில் புயலில்…

Read More

மாற்று அழகி போட்டி நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

‘Muslimah World’: Indonesians hold Islam’s answer to Miss World  இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு காரணமாக, அங்கு நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் நீச்சல் உடை சுற்றுகளை போட்டியாளர்கள் ரத்து செய்து விட்டனர். அதே போல் கடற்கரையில் குளியல் ஆடையில் தோன்றும் சுற்றும் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அழகி போட்டியை எதிர்த்து மாற்று அழகி போட்டி ஒன்றை நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஈகா “இஸ்லாமிய உலகம் இயல்பிலேயே அழகானது. தன்னம்பிக்கையும், நன்னடத்தையும், ஆன்மிக மனமும் தான் தற்போது உலகம் முழுவதும் பெண்களுக்கு தேவையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பெண்களை வெறும் உடல்…

Read More

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற இந்திய வம்சவாளி பெண் நீனா

Miss New York crowned 2014 Miss America   அமெரிக்காவின் 2014-ம் ஆண்டுக்கான அழகி போட்டி நியுயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளிப் வம்சாவளியை சார்ந்த பெண்னான நீனா தவுலூரி தேர்வாகியுள்ளார். இதன் மூலம் இந்த வகையில் அமெரிக்காவின் சிறந்த அழகியாக தேர்வான முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  நீச்சல் உடை அணிவகுப்பு, நடனம், பாடல், நடுவர்களின் சமஜோதிமான கேள்விகள் என்பவற்றுடன் 50 மாநிலங்களின் 50 போட்டியாளர்களை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் நியூயோர்க் மாநில அழகியான நீனா தவுலூரி. 24 வயதான இவருக்கு இதன் மூலம் 50,000 அமெரிக்க டாலர் பெறுமதியான பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் பாலிவூட் ஸ்டைலில் பிஃயூசன் நடனமாடி அனைவரையும் அசரவைத்திருந்தார் நீனா. நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்றியது.…

Read More