nose in forehead for a Chinese man சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்ற நபருக்கு நெற்றியினில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனா நாட்டை சேர்ந்த ஜியோலியன் (வயது 22) என்ற வாலிபருக்கு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் மூக்கில் பலத்த காயம் உண்டானது. இந்த காயத்திற்கு அவர் முறையான சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால், முற்றிலும் குருத்தெலும்பு சேதம் அடைந்து மூக்கு சிதைந்தது. இந்த சிதைந்த மூக்கை மருத்துவர்களால் சரிசெய்ய இயலாத காரணத்தால், ஒரு புதிய மூக்கை அவரது முகத்தில் உருவாக்க தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையை கையாள முடிவு செய்தனர். இந்த மருத்துவ முறைக்காக இடுப்பு எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்சமயம் முழுமையான வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், கூடிய விரைவில் அது அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு மூக்கு பகுதியில்…
Read MoreCategory: உலகம் சிறகுகள்
நெல்சன் மண்டேலாவுக்கு மனித நேய சாதனையாளர் விருது
Nelson Mandela presented humanitarian achievement award தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர். Nelson Mandela presented humanitarian achievement award Ailing former South African President Nelson Mandela has been presented with a humanitarian achievement award for his contribution to South-South cooperation and sustainable development. In…
Read Moreகென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி
39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெரிய வணிக வளாகத்தினுள் நேற்று நவீன துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர். அந்த தீவிரவாதிகள் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீர் என கண்மூடித்தனமாக அங்கே இன்ருந்தவர்களை நோக்கி சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் இந்தியர் இருவர் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் பார்மா கம்பனியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகிய இந்தியர்களும் அடக்கம். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட நான்கு இந்தியர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த பொழுது அந்த வளாகத்தில் சுமார் 1,000 பேர் இருந்தார்கள். கென்ய…
Read Moreசெப்டம்பர் 21 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உலக அமைதி தினம்
International Day of Peace Observed on 21 September உலக அமைதி நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக…
Read Moreபிரான்சில் மலையிலிருந்து குதிக்கும் சாதனையில் ஈடுபட்ட அமெரிக்கர் பலி
American wingsuit flyer dies in French Alps பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு அமெரிக்கர் பலி. 33 வயது நபர் அமெரிக்கர் ஒருவர் 2,500 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாதனைக்கான பயிற்சியின் போது இவர் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். அந்த அமெரிக்கரின் பெயர், ஏனைய விபரங்கள் மற்றும் விபத்து குறித்து தகவல்கள் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பயிற்சி அதிகாரிகள் கூறுகையில்; இந்த மலை பகுதி மிகவும் ஆபத்து நிறைந்தது எனவும் இந்த பகுதியை பற்றி முழுமையாக அறியாமலும், இந்த மலையில் ஏறுவதற்கு உண்டான பயிற்சி இல்லாமலும் சென்றால் விபத்து நிகழ்வு நிச்சயம் என குறிப்பிட்டுள்ளனர். இதுவரை ஆல்ப்ஸ் மலையில் சாதனையில் ஈடுபட்டு பலியானோர் எண்ணிகை 6 ஆகும். கடந்த…
Read Moreஉலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்து அமெரிக்கர் சாதனை
25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car அமெரிக்கர் ஒருவர், உலகிலேயே மிகவும் சிறிய கார் ஒன்றை வடிவமைத்து, தயாரித்து, அதை சாலையில் ஓட்டி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது தயாரிப்பை இடம் பெறச் செய்துள்ளார். இவரது பெயர் திரு ஆஸ்டின் கால்சன், இவர் கார் வடிவமைக்கும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பல வித்தியாசமான கார்களை வடிவமைத்துள்ள திரு ஆஸ்டின் கால்சன், தான் எதாவது புதுமை படைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய மிக சிறிய கார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மிகச் சிறிய காரை சாலையில் ஓட்டுவதற்கு சில அத்தியாவசிய அம்சங்கள் தேவைப்பட்டன. அதன் அடிபடையில், ஒலிப்பான், பாதுகாப்பு கண்ணாடி, மற்றும் சீட் பெல்ட் போன்ற பொருட்கள் சேர்த்து…
Read Moreகிணற்றில் விழுந்த 38 வயது பெண் 15 நாட்களுக்கு பின் மீட்பு
Chinese woman survives 15 days in well சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (வயது 38). இவர் கடந்த 1-ம் தேதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று, மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ…
Read Moreஜிம்பாவ்வே கிரிக்கெட் வீரர் படுக்கை அறைக்குள் 8 அடி நீள முதலை
Former Test cricketer Guy Whittall finds crocodile under his bed ஜிம்பாவ்வேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கெய் வெட்டல் (40). இவர் ஜிம்பாவ்வே நாட்டின் மாஜி கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு, குடியிருப்பையும் அமைத்து வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு தனது படுக்கையறையில் படுத்து ஹை வெட்டல் உறங்கத் தொடங்கினார். அப்போது அவரது அறைக்குள் சுமார் 8 அடி நீள முதலை ஒன்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்தது. இது எதுவும் கெய் வெட்டலுக்கு தெரியாமல் நன்றாக குறட்டை விட்டு உறங்கினார். அறைக்குள் புகுந்த முதலை நைசாக இவரது கட்டிலுக்கு அடியில் புகுந்தது. அங்கு டைல்ஸ் தரையில் ஹாயாக உறங்கியது. காலையில் கண்…
Read Moreவங்கதேச ஆயுள் தண்டனை கைதி மேல் முறையீட்டில் மரண தண்டனை
Abdul Kader Mullah Gets Death Penalty For War Crimes பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971-ம் ஆண்டு நடந்த போரில், பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் அப்துல் குவாதர் முல்லாவிற்கு மேல் முறையீட்டில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் பிப்ரவரியில், 65 வயதான அப்துல் குவாதர் முல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஒருவருக்கு கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்று முல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர்,…
Read Moreஇத்தாலியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலை மீட்பு
Costa Concordia: Stricken ship set upright in Italy கிக்லியோ போர்ட்டோ: இத்தாலி கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் இத்தாலியின் கடற்கரை கிராமமான டஸ்கன் தீவு அருகே வந்தது. கப்பலில் 4,200 பயணிகள் இருந்தனர். கடற்கரைக்கு அருகில் வந்தவுடன் பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்தது. அப்போது கடலில் மூழ்கி 32 பேர் இறந்தனர். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்தக் கப்பலை மீட்கும் பணியில் கப்பல் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் கடந்த ஒரு…
Read More