கணனியை வேகமாக தாக்கி ஃபைல்களை அழிக்கும் கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ்

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’ 1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது.   கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அநேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பி .சி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம். கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு…

Read More

தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலி

South African Indian Origin newly wedded couple killed in road accident enroute to honeymoon தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது தேன்நிலவுக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் நசுங்கி பலியாகினர். தென்னாப்ரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஆஷ்லே ரெட்டி (வயது 30) இவர் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் – தீபிகா (வயது 29) ஆகிய தம்பதிகள் இந்து முறைப்படி உறவினர்கள் படை சூழ, வாழ்த்தொலி முழங்க திருமணம் செய்து கொண்டார்கள். திங்களன்று திருமணம் முடிந்து தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த கோர விபத்தில் மற்றும் ஓர் இளைஞர் உடல் நசுங்கி பலியானார். ஞாயிறு கிழமையன்று மிக்க மகிழ்ச்சியோடும், வாழ்த்துக்களோடும்…

Read More

பாகிஸ்தாநில் 13வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

13-Year-Old Pakistani boy Gets 50 Years in Jail for Murder பாகிஸ்தானில் தனது தந்தையை கொல்ல முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குர்ஜன்வாலா பகுதியை சேர்ந்த ஒரு நபரை ஹபிஸ் கியாஸ் என்பவர் கொல்ல முயற்சித்தார். ஹபிஸ் தாக்கியதில் அந்த நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹபிஸ் கொலை செய்ய முயற்சித்ததற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஹபிஸ் தாக்கிய நபரின் 13 வயது மகன் கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்து, ஹபிசை சுட்டு கொன்றார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை குர்ஜன்வாலா மாவட்டத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு…

Read More

அறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர்

World’s smallest pacemaker implanted without surgery  இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.   அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட்…

Read More

சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்

Chinese boy kept in cage for 40 years மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின்…

Read More

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்

Over 20,000 Indians apply for one-way trip to Mars செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார்…

Read More

ஐஃபொன், ஸ்மார்ட்ஃபொன் மூலம் அல்ட்ரா சவுண்ட் அமெரிக்க மருத்துவகல்லூரி மாணவர்கள் சாதனை

Ultrasound now possible in your smart phone. மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை…

Read More

கைபேசியில் வலைத்தளம் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு

After Facebook, now access Twitter on mobiles without Internet உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதனால் டுவிட்டரின் பயன்பாடு குறைவாக இருப்பதாக கருதி மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு…

Read More

எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும்

Coffee machines ‘leave lead in drink’   எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும் என ஜேர்மனின் பாதுகாப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.     ஜேர்மனின் பெர்லின் நகர இடர்மதிப்பிடு நிறுவனம் மூன்றில் இரண்டு பங்கு எஸ்பிரஸோ காபி எந்திரத்தை சோதனை செய்தது.  இதுகுறித்து அந்நிறுவனமும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில், இந்த காபி எந்திரத்தை 100 முறை சுத்தம் செய்தாலும் அதில் அதிக அளவு ஈயம் வெளிவருவகின்றது.  மேலும் இதன் இரண்டாம் பரிசோதனைக்கு பின்பும் ஈயத்தின் தாக்கம் காப்பியில் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.  இதற்கு காரணம் இவ்வியந்திரத்தை சுத்தமிடும் பொழுது இதிலுள்ள கால்சிய தன்மை குறைந்து ஈயத்தில் தன்மை நிறைந்துவிடுகின்றது.இதன் மூலம் மக்களுக்கு உடல்நல கேடு நேரிடும் என பாதுகாப்பு ஆய்வு அறிவிக்கின்றது.  “காப்யூல்” அல்லது “காபிபாட்”…

Read More

துபாயில் மரத்தில் தொங்கிய இந்தியரின் சடலம் மிட்பு

Body of Indian man found in Dubai துபாயின் தொழில்பேட்டை ஒன்றின் அருகே உள்ள மரத்தில் இந்தியர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அல்குவோஸ் தொழில்பேட்டை வழியாக காலை ஓட்டப் பயிற்சிக்கு சென்ற ஒருவர் அங்குள்ள மரத்தில் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் இருந்து பிரேதத்தை இறக்கி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் இறந்த நபர் இந்தியர்தான் என்பதை உறுதிப்படுத்திய துபாய் போலீசார், இறந்த நபர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை ஊழியர்கள் விடுதியில் தங்கியிருந்தவராக இருக்கலாம் என்று கூறினர். அவரது பெயர், ஊர் பற்றிய விபரங்களை சேகரிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். Body of Indian man found in Dubai…

Read More