இந்திய சிறைக் கைதிகளாக நாலு லட்சம் வாக்காளர்கள்!!

There is totally 4 lakhs people being accuse into the jail. So, they are not allowed to do their democratic duty. தினம் தினம் அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையால் வெளியில் இருக்கும் மக்களைவிட, சிறைக்குள் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மொத்தமாக உள்ள 1,400 சிறைகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், காவல் நீடிப்பு கைதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு கைதிகள் உள்ளனர்.  ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் அவருடைய வாக்குரிமை உட்பட சட்டப்படி அங்கீகரிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இழக்கிறார். இதனால், இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் இருப்பவர்களில் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால்,…

Read More

ஜார்கண்டில் வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை

Jharkhand woman gives kidney to husband as dowry, kills self after six months நோய்வாய்ப்பட்ட கணவனைக் காரணம் காட்டி பாக்கியுள்ள வரதட்சணைப் பணத்திற்கு மனைவியின் கிட்னியை கொடுக்குமாறு செய்ததால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் தேவி என்ற இந்தப் பெண்ணிற்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுதாமா கிரி குடும்பம் பூனம் தேவி குடும்பத்திடமிருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணைப் பெற்று கொண்டனர். இருந்தாலும் போதவில்லையாம்! தொடர்ந்து பூனம் தேவியை வரதட்சணை கேட்டு துன்பம் செய்துள்ளனர். இந்த நிலையில் கணவன் சுதாமா கிரி நோய்வாய்ப்பட்டார். அவரது கிட்னி செயலிழந்தது. இந்த நிலையில் பூனம் தேவி அவரது கிட்னியை கணவனுக்கு தானமாக அல்லாமல் வரதட்சணையாக…

Read More

தமிழகத்தில் வாக்களிக்க வசதியாக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை

Polling day: Holiday must for all on Thursday, says Tamil Nadu Government தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 135 பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள்,…

Read More

நடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன்

Wife claims husband affixed tracker in her body ‘டிராக்கர்’ எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால்…

Read More

தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து

Hundreds Remain Missing After South Korean Ferry Sinks   தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான படகில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர். ஜிஜீ தீவுகளுக்கு தென் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனையடுத்து படகில் இருந்து உதவி கோரப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் சென்றனர். கப்பல் நீரில் மூழ்கியதில் 2 பேர் பலியாகினர். 180 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் 16 ஹெலிகாப்டர்கள், 34 மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Hundreds Remain Missing After South Korean Ferry Sinks About 160 passengers, including…

Read More

அசாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் 50 பயணிகள் காயம்

Train derails in Assam   அஸ்ஸாம் மாநிலத்தில் திம்பூர்–கமாக்யா இடையே சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை  தடம் புரண்டது, இந்த விபத்தில் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அஸ்ஸாமில் உள்ள மோரிகான் பகுதியில் சென்று கொண்டிருந்த 15666 BG எக்ஸ்பிரஸ் ரயில் அஜுரி ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. ஒன்றன்பின் ஒன்றாக 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால், சுமார் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களில் 17 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர்கள் மோரிகானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Train derails in Assam Over 50 passengers were injured, 19 of them seriously, when the engine and 10 coaches of the Dimapur-Kamakhya BG Express derailed…

Read More

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் : சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம்

Transgenders are the ‘third gender’, rules Supreme Court திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு. மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள்…

Read More

மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பயனிக்கும் அதிநவீன கார்

உலகில் அதிவேக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினர் இக்காரை வடி வமைத்துள்ளனர். அதில், விண்வெளி, ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 என்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் கலக்கப்பட்டுள்ளன. ‘சூப்பர் கானிக்’ என்றழைக்கப்படும் அதிவேக கார் தயாரிக்கும் பணி கடந்த 2008–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது இப்பணி முடிவடைந்து விட்டது. அது சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும். இக்காரை விங் கமாண்டர் ஆன்டிகிரீன் இயக்குகிறார். இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் கார் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2016–ம்…

Read More

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு திருநங்கை விண்ணப்பித்து இருக்கிறார். இதன் மூலம் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாரதி கண்ணம்மா அரசியல் கட்சிகளின், மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார். அனேகமாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் இந்தியாவின் முதல் திருநங்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன என்று கேட்டோம் அவரிடம். “பல பெரிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்று எம்.பி.யாவேன் என்பதெல்லாம் இப்போது உடனே இயலாத காரியம் என்பதை நான் அறிவேன். எனினும் இதர பாலினத்தவர்களில் ஒருவர் போட்டியிடுவது என்பது தேர்தல் அரசியலில் நாங்களும் பங்கேற்கிறோம் என்பதை அறிவிக்கவும் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலும்கூட நாங்கள் இன்னும் வலுவாக எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலுமே களம் இறங்கி இருக்கிறேன்…

Read More

ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்

World Health Day celebrated தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம். அந்த வகையில் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் அமைப்பான உலக சுகதார அமைப்பின் சார்பில் இன்று “உலக சுகாதார தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.  ஒருங்கிணைப்பு பணி: இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஜெனிவா அமைப்பு: இந்நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. நோய்களை விரட்டுங்கள்; இதன் முக்கிய வேலையானது “தொற்றுநோய்கள்” போன்ற நோய், நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில்…

Read More