மலையாளம் தெரிந்தால் மட்டும் கேரள அரசு வேலை: உம்மன் சாண்டி

Malayalam compulsory for govt jobs ஆகஸ்ட் 25, 2013: திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவியேற்றதும் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் வாழும் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் சிறுபான்மையின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனே அமல்படுத்தக் கோரி சில மலையாள அமைப்புகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாளம் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை…

Read More

நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை

Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack   நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 41 பேரின் குரல் வளையை அறுத்து பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அப்பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான போகோ ஹராம் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் இக்கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்து விடும் என நினைத்து பயங்கரவாதிகள் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலரது கண்களை…

Read More

இலங்கை ஊடகவியலாளர் வீட்டில் குற்றக்கும்பலுடன் போலீஸ் மோதல்

Sri Lankan editor held at knifepoint as home searched சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனாலும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கொள்ளையர்கள் மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டியின் டிக்மன் வீதியிலுள்ள ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, அவரின் மகளையும், தாயையும் கத்திமுனையில் வைத்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் எங்கே என்று கேட்டுள்ளனர். குறித்த சமயத்தில் மந்தனாவின் கணவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டுக்கு திரும்பியதும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்று உணர்ந்து போலீஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த போலீஸார் ஆயுதம் தாங்கிய கொள்ளைக்குழுவை…

Read More

அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்

US woman turns up alive after her own funeral   அமெரிக்காவில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டு இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஒரு பெண் உயிரோடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலடெல்பியாவை சேர்ந்த 50 வயது பெண்ணான ஷரோலின் ஜாக்சன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.கடந்த மாதம் 20 ஆம் தேதி, தெருவில் கிடந்த ஒரு சடலத்தை ஷரோலின் ஜாக்சன் என அவரது மகன் மற்றும் ஒரு சமூக சேவகர் அடையாளம் காட்டி சடலத்தை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்து புதைத்துள்ளனர்.  இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஷரோலின் ஜாக்சன் ஒரு மருத்துவமனையில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிந்த பிறகு, யாருக்கு இறுதி…

Read More

டுவிட்டரில் நடிகர் விஜய் பெயரில் விஷமிகள் பொய் தகவல்

news from Twitter regarding Actor vijay in politics is False சென்னை: விஜய் ட்விட்டரில் இல்லை. அவர் பெயரில் வந்த அறிக்கை யார் வெளியிட்டதென்றும் தெரியவில்லை என்று விஜய்யின் மேலாளர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு டுவிட்டர் இணையதளத்தில் கணக்கு வைப்பே இல்லை அவர் கூறியதாக வந்த செய்தி பொய்யான ஒன்று என அவர் தரப்பு செய்திகள் தெருவிக்கின்றன நடிகர் விஜய் தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் திடீர் எச்சரிக்கை விடுத்ததாக இணையத்தில் வெளிவந்தது . அவர் பெயர் கொண்ட டுவிட்டர் தளத்தில், “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம், எனது ரசிகர்கள் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம்…

Read More

நாடாளுமன்றத்துக்கு தேர்வானார் நடிகை ரம்யா

Congress wins Karnataka by-polls: Actress Ramya wins Mandya seat   கர்நாடகாவில் உள்ள இரு மாக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா, மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல பெங்களூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற…

Read More

திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEO

microsoft ceo steve ballmer retire soon அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மர் பதவி வகித்து வருகிறார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சின் நீண்டநாள் நண்பரும், நம்பிக்கைக்குரியவரும் ஆவார். இந்நிலையில் ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சிஇஓ தேர்வு செய்யப்படும்வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடித்திருப்பார். புதிய சிஇஒ தலைமையின் கீழ் புதிய உத்திகளுடன் சந்தையில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. microsoft ceo steve ballmer retire soon In a surprise move, Microsoft on Friday announced that CEO Steve…

Read More

மசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி

Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli திரிபோலி:லெபனானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியானார்கள்.   லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவினர் ஹெஸ்போலாக் என்ற அமைப்புடன் சேர்ந்து சன்னி பிரிவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதரப்பினரிடையே இதுவரை நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் லெபனான் திரிபோலி நகரத்தில் உள்ள தாஹ்வா மசூதியில் ஏராளமான சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த பரபரபரப்பு அடங்கும் முன்பு சில நிமிடங்களில் அல் சலாம் மசூதி அருகே மற்றொரு குண்டு…

Read More

இந்தியாவை பங்கு போட அடுத்த நாடு!!! மியான்மர் ஊடுருவல்

Myanmar army crossed the indian border entered Manipur Myanmar army enters Manipur, stakes claim to border village இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் பிரச்சனை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய பிரச்சனையாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா – மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் காவல் துறையினர்…

Read More

ஆந்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில்3 பேர் பலி

Vizag refinery fire death toll rises to 4 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பணியாளர்கள் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுத்திகரிப்பு ஆலையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென ஆலை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பலர் தங்களது உடமைகளை விட்டு விட்டு அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு அகன்று சென்று விட்டனர்.தகவலறிந்ததும் விசாகப்பட்டினம் நகரிலிருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்தத் தீ விபத்தில் முதலில் ஒரு பணியாளர் உயிரிழந்ததாக…

Read More