சென்னையில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து..

சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் . பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர். பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் .

பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.
பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts