விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கில் விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரிக்கு அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம்

மோட்டார் விபத்து தீர்ப்பாயம்

சென்னை:திண்டிவனத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ பள்ளி வாகனம் ஏறி பலியானார்.பள்ளி வாகனம் ஏறி பலியான சிறுமிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தாய் அஞ்சலி தேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இழப்பீடு தொகை தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையாக தலா 10 ஆயிரம் விதிக்கப்பட்டது.

Read More

தண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:இளையராஜா என்பவர் வழக்கு நங்கநல்லூரில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. நீரை எடுத்து வழங்குவதற்கு லாரிகளின் உரிமம் விவரங்களை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது. விவரங்களை வழங்க மறுத்தால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

தனியார் கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் எஸ்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த குழு கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தது.ஆய்வு செய்த பிறகு குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.பிறகு கல்லூரி நிர்வாகம் அறிக்கையை கொடுத்தது. அறிக்கை தெளிவாக இல்லை என கூறி எம்.இ பட்ட மேற்படிப்புக்கு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது.மேலும் பி.இ இயந்திரவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது என கூறி கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Read More

ஆறு வாரகால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் நாளை திறக்கப்படவுள்ளது.

டெல்லி:கோடை விடுமுறையால் உச்சநீதிமன்றம் ஆறு வாரம் திறக்கப்படவில்லை.கோடை விடுமுறைக்கு பின் நாளை அதாவது ஜூலை 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கீழ் இயங்கும் 31 நீதிபதிகளும் கோடை விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.உச்சநீதிமன்றம் தொடங்கியவுடன் பல முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

Action against Traffic sub-inspectors who do not impose spot fines and compound offences of not wearing Helmet 

சென்னையில், தலைக்கவசம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கட்டாய தலைக்கவச சட்டம் கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரும் வழக்கில், இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் காயமுற்று உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு ஏற்கெனவே ஆணையிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை எனில், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன்…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் பாலமுருகன் அ.ம.மு.க ( கடலூர் மாவட்ட செயலாளர்) மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் , திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணம் போக்குவரத்து இடையூறு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்று மனுதாரர் தரப்பு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Read More

பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வழக்கறிஞர் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.அண்ணாநகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு விசாரித்தது .ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More

சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை 4 வயது சிறுமி! கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு பாலியல் கொலை தனியாக வீட்டில் 4 வயது மகளை விட்டுச்சென்ற தாய், திரும்பி வந்த போது மகளை சடலமாக காண வேண்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் மகள் பாலியல் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அந்த தாய்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சென்னையையடுத்த, திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கணவர் பணிக்குச் சென்றுவிட, அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். மாலை நேரத்தில் மகனை டியூசனுக்கு அழைத்துச்…

Read More

முகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம்

காணாமல் போன சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்கும் சிபிசிஐடி காவல்துறை சரியாக பாதையில் சென்று போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முகிலனை மீட்பதற்காக மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி…

Read More

சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை:சட்ட விரோத பேனர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த தவறிவிட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More