சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை:சட்ட விரோத பேனர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த தவறிவிட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts