சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Read More

ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த ஏரி,குளங்களை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னையை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த மனுவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Read More

அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ்

டெல்லி: அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடுவதால் நான் மிரட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.எனக்கு சென்னையை சேர்ந்த 88 வயது பேராசிரியர் சண்முகம் என்பவர் மிரட்டல் கடிதம் ஒன்றை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அனுப்பி இருந்தார். மேலும் சஞ்சய் கலாய் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பி இருந்தார் என்று தவான் தெரிவித்தார்.எனவே முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் தவான் வழக்கறிஞரை மிரட்டியதால் பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் அனுப்பியது.

Read More

தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

பிலோலா: இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நாடேசாலிங்கம் தனி தனியாக படகு மூலம் 2012 மற்றும் 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியா சென்றனர்.பிறகு பிரியா மற்றும் நாடேசாலிங்கம் திருமணம் செய்து கொண்டு மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலா நகரத்தில் மூன்று வருடமாக வாழ்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோபிகா மற்றும் தருணிகா என்ற இரு பெண் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.அந்த இரு குழந்தைகளின் இப்போதைய வயது 4 மற்றும் 2 ஆகும்.அவர்களின் விசாக்கள் காலாவதியான பிறகு, குடும்பத்தை எல்லைப்படை அதிகாரிகள் மார்ச் 2018 இல் வீட்டிலிருந்து அகற்றினர்.அவர்கள் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு வரை இருந்தனர்.பிலோலா சமூகமும் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக நீதிக் குழுக்களும் குடும்பத்தை விடுவிக்க போராடியுள்ளன. இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான…

Read More

தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.

Read More